பக்கங்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2012

ஜெபம்

ஜெபம் என்றால் என்ன? 

ஜெபம் என்பது தேவனுடன், தேவன் நம்முடன் பேசும் ஒரு வழிமுறை ஆகும். அது ஒரு வழிச் சாலை அல்ல, இருவழிச் சாலை. நாம் பேச அவர் பேச இருவரும் உரையாடி மகிழும் ஒரு இனிமையான நேரம் அதுவாகும். 

இன்று ஜெபம் செய்தீர்களா? 
பொதுவாக கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் ஜெபம் செய்தீர்களா என்று கேட்டால் சாரி பிரதர், சாரி சிஸ்டர் எனக்கு நேரமே கிடைக்க மாட்டேங்குது என்பார்கள். இன்றைய வேகமான சூழ்நிலையில் நாம் அத்தகைய பதில்களி ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இயேசுவின் வாழ்க்கையை கவனித்துப் பார்த்தாஅல் அவர் சம்யம் கிடைக்கும் போதெல்லம் ஜெபித்தார். அவரைச் சுற்றிலும் எப்போது ஜனங்கள் இருந்தனர். ஊழியம் இருந்தது. அவருக்கு போஜன்ம் அருந்தக் கூட நேரமில்லாதிருந்தது என்று நாம் வாசிக்கிறோம். அதேவேளையில் அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் என்று மத்தேயு14:23, மற்கு6:46 ஆகிய இடங்களில் வாசிக்கிறோம். இன்னும் பல இடங்களில் இயேசு ஜெபம் செய்ய சென்றதை நாம் காண்கிறோம். தேவனும் தேவ குமாரனுமாகிய இயேசுவுக்கே ஜெபம் தேவையானதாக இருந்தது, மற்றும் அவ்ருக்கு நேரமும் கிடைத்தது. நமக்கூ ஏன் நேரம் கிடைப்பதில்லை? ஏன் காலங்கள் பல ஆன பின்பும் நாம் சுருக்கமான் ஜெபம் பெருக்கமான் ஆசீர்வாதம் என்ற கொள்கையுடன் அவ்சரம் அவ்சரமக ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும்? சற்று சிந்தித்துப் பார்ப்போமாக.

என்ன ஜெபிக்க வேண்டும்? 
நம் எல்லாருக்குமே அதிக நேரம் ஜெபிக்க ஆசைதான். ஆனால் அது நடப்பதுதன் இல்லை. நம்மில் பலர் அதிக நேரம் ஜெபிக்க வேண்டுமெனில் ஏராளமான ஜெப விண்ணப்பங்களோடு ஆயத்தத்துடன் சென்றால் போது. மணிக்கணக்கில் ஜெபிக்கலாம் என்று நினைக்கிறோம். உண்மை என்ன? நம்மிடம் ஒரே ஒரு ஜெபக் குறிப்பு இருந்து நாம் உண்மையான பாரத்தோடு ஜெபித்தால் அதற்கே பல மணி நேரங்கள் ஆகலாம். அதிக வசனிப்பு ஜெபத்திற்கு அலங்காரமாக இருந்தாலும் தேவன் அப்படிப்பட்ட ஜெபங்களை விட ஆயக்காரன் அன்று செய்தது போல சிறிய எளிஅ ஜெபங்களை மிகவும் விரும்புகிறார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் என்று மத்தேயு6:7,8 ஆகிய வசனங்களில் இயேசு சொல்லியிருக்கிறார். 

அப்படியானால் நாம் எதற்காகத்தன் ஜெபிப்பது? 
நம்முடைய கரியங்களுக்காக ஜெபிக்க தேவையில்லைதன். ஆனல் ஜெபிப்பது தவறில்லை. 
1.தேசத்திற்காக 
தேசத்தின் எதிர்காலம் ஜெபிக்கிற தேவனுடைய பிள்ளைகளின் கயிலேதான். 
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன் என்று தேவன் 2 நாளாகமம்7:14ல் சொல்லியிருக்கிறார். 
மேலும் அப்போஸ்தலனகிய பவுல் நமக்கு ஒரு பிரதனமான ஆலோசனையை தருகிறார். 
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது (1தீமோ.2:1- 3). 

2.பின்மாரிக்காக 
நாமெல்லாரும் முன்மாரியைக் குறித்து அறிந்திருக்கிறொம். அன்று பரிசுத்த ஆவியின் வல்லமையல் சபை உண்டானது, 3000பேர் ஒரே பிரசங்கத்தினாஅல் இரட்சிக்கப்பட்டனர். சபை வேகமாக வளர்ந்து பரவியது. முன்மாரியை கண்டு ஆச்சரியப்பட்ட நாம் பின்மாரிக்கக்வும் ஆவ்லுடன் காத்திருந்து அதற்கக் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பல தேவ ஊழியர்கள் மூலமக அதை அடிக்கடி நினைவு படுத்தவும் செய்கிறார். நாம் பின் மாரிகாலத்து மழைக்கக பரிசுத்த ஆவியன்வ்ரின் அருள் மாரிக்கக் ஜெபிக்கிறோமா? இன்றே ஜெபிப்போம். 
பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். ( சகரிய.10:1) 


3. ஊழியர்கள் எழும்ப 
அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வேண்டிக் கொள்கிறதை நம் மத்தேயு9:37,38 மற்றும் லூக்கா10:2 ஆகிய வசங்களில் நாம் வாசிக்கிறோம். பாருங்கள். நாம் மேற்சொன்னது போல தேசத்திற்ககவும் பின்மாரிக்காகவும் ஜெபிக்கும் போது நிச்சயமாக தேவன் நம் ஜெபத்தைக் கேட்டு ஒரு பெரிய அறுவடையை அனுப்புவார். அறுவடைக்கு ஆட்கள் இல்லையேல் என்னவாகும் அறுவடை அனைத்தும் வீணாகிவிடும். அனைவரின் உழைப்பும் வீண். எஜமானுக்கும் வேலையாட்களுக்கும் எல்லாம் நஷ்டமே? 
இன்றூம் நாம் இந்தியாவில் காண்கிற உபத்திரவ்ங்கள் எல்லாம் காட்சிகள் எல்லாம் பயிர் முற்றி அறுவடைக்கு ஆயத்தம் என்பதை நம்க்கு மறைமுகமக் சொல்கிறது., சீக்கிரத்தில் இந்திய தேசத்தில் ஒரு பெரிய அறுவடை உள்ளது. எல்லாரும் எதிர்பார்க்கிறோம். அறுவடைக்கு ஆட்கள் உள்ளனரா என்று பார்க்கிறோமா. ஆகவே நமெல்லோரும் வேலையாட்களை தேவன் அனுப்பும் படி ஜெபிப்போம். 

தேவன் என்ன செய்வார்? 
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்? என்று கேட்பார். நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்று சொல்வோமாகில் இந்திய தேசம் இரட்சகரைக் கணும் நாள் தூரத்திலில்லை. ஆகவே ஆண்டவ்ரின் மன்வேதனையை அறிந்து அதைப் புரிந்தவர்களாக நாம் ஜெபிப்போம். ஜெபிப்ப்பதற்கு நமக்கு பல காரியங்கள் இருந்தாலும் இந்து மூன்றும் முக்கியமந்து. ஆகவே ஜெபம் செய்வோமாக.............ஆமென். 

  ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்.(ஏசாயா 59:16)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக