பக்கங்கள்

திங்கள், 26 நவம்பர், 2012

உப்பு அதிகமாகிவிட்டதா?


உப்பு அதிகமாகிவிட்டதா?


*சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டதா? கவலை வேண்டாம். ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நறுக்கிப் போட்டுக் கொதிக்க வையுங்கள். உப்பு அல்லது காரம் சரியாகிவிடும்.

ரவா லட்டு செய்யும்போது....

*ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து தயாரித்தால், ரவா லட்டின் சுவை மேலும் கூடும்.

எண்ணெய் காறலை போக்க...

*வடை, போண்டா தயாரித்த எண்ணெய் காறலாக இருக்கும். இதை போக்க ஒரு வழி. எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்துவிடவும். இப்படி செய்தால் எண்ணெயின் காறல் குறைந்துவிடும்.

தக்காளி சூப் தயாரிக்கும்போது...

*வீட்டில் தக்காளி சூப் தயாரிக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ். சூப் தயாரிக்கும் போது நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை அதில் போட்டு விட்டால், சூப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாப்பிட சுவையாக இருக்கும்.

கத்தரிக்காய் வாடாமல் இருக்க...

*கடையில் பிரெஷ் ஆக வாங்கி வைத்த கத்தரிக்காய் வாடி வதங்கி விடுகிறதா? கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும். 

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!


சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!


வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். 

தயாரிப்பது எப்படி?

ஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் காஸ்டிக் சோடா 100 கிராம் போட வேண்டும். தண்ணீர் சூடாகும். மற்றொரு வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் சோடா ஆஷ் (வாஷிங் பவுடர்) ஒரு கிலோ போட வேண்டும். அதுவும் சூடாகும். இன்னொரு வாளியில் 2 லிட்டர் நல்ல தண்ணீரில் யூரியா ஒன்றரை கிலோ போட வேண்டும். தண்ணீர் குளிர்ந்து போகும். 3 வாளி நீரையும் ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அவை சம வெப்ப நிலையை அடையும். 3 வாளிகளில் உள்ள நீரை ஒரு கேனில் கொட்டி கலக்க வேண்டும்.

இன்னொரு வாளியில் சிலரி ஒரு கிலோ, ஒலிக் ஆசிட் 100 கிராம் கலக்க வேண்டும். அதை கேனில் உள்ள கலவையில் கொட்டி சில்வர் கரண்டியால் நன்கு கலக்க வேண்டும். நுரை பொங்கி வரும். 2 மணி நேரம் காத்திருந்தால் நுரை வற்றி, சோப் ஆயில் கிடைக்கும். அதில் நறுமண லிக்விட் 15 மிலி கலந்தால் சோப் ஆயில் தயார். இதன் மூலம் 10 லிட்டர் சோப் ஆயில் கிடைக்கும்.

உபயோகிக்கும் முறை: 200 மிலி சோப் ஆயிலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். 10 முதல் 15 துணி வரை அரை மணி நேரம் ஊறவைத்து கையாலோ, வாஷிங்மெஷின் மூலமோ துவைக்கலாம். துணி துவைக்க மட்டுமல்ல, பாத்திரம் கழுவ, தரை, கழிப்பறை, பாத்ரூம், வாகனங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் சருமத்துக்கு எவ்வித கேடும் ஏற்படாது.

என்னென்ன தேவை?

சிலரி, காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், யூரியா, ஒலிக் ஆசிட், பெர்ப்யூம், தண்ணீர். இவை அனைத்தும் கெமிக்கல் கடைகளில் கிடைக்கிறது. ரூ.10 ஆயிரம் போதும் இந்த தொழில் செய்ய பெரிய அளவில் இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை. மூலப் பொருட்கள், தயாரித்த சோப் ஆயில்கள் இருப்பு வைக்க வீட்டுக்குள் பாதுகாப்பான சிறு இடம், சோப் ஆயில் தயாரிக்க வீட்டு பின்புறம் அல்லது ஒதுக்குப்புறமான சிறு இடம் போதுமானது. ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தளவாட சாமான்கள், ஒரு மாத சோப் ஆயில் உற்பத்திக்கு தேவையான கெமிக்கல்களை வாங்கி விடலாம்.

காசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு


காசு கொழிக்கும் ஹேர் ஆயில் தயாரிப்பு


‘கூந்தல் வளர்ச்சிக்காக,  தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம்  உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களைபயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்  என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை பத்மாவதி.

ஹேர்ஆயில் 3 ஆண்டு வரை கெடாது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்துகூட விற்கலாம். மாதம் ரூ.2 லட்சத்துக்கு ஹேர் ஆயில் விற்று வருகிறேன். வீட்டில் இருந்தபடியே பெண்கள் செய்ய ஏற்றதொழில் இது. ஹேர் ஆயிலை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.

தயாரிப்பது எப்படி?

தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி  நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள

வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர்

இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து

எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.

இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும்

எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில்

ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

பக்குவம் முக்கியம்: கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய்

அளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது.  எண்ணெய் முழுவதும் மூலிகை

எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக

இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்துவிடலாம்.  

காசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு !


காசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு 


*வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். 

*பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை).  குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.

*பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். 

*தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். 

*இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.

நல்ல லாபம் பார்க்கலாம் நேந்திரன் பழம் சிப்ஸில்


நல்ல லாபம் பார்க்கலாம் நேந்திரன் பழம் சிப்ஸில்


ரசாயன உரம் தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்து, தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பது லாபகரமானது. இயற்கை முறையில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் இணைந்து  சிப்ஸ் தயாரித்து விற்றால் நல்ல லாபம் அடையலாம் 

சந்தை வாய்ப்பு: 

டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பேக்கரிகளில் இயற்கை விவசாயத்தால் விளைந்த பொருட்களை விற்பனை செய்யும் பிரிவுகள் தனியாக உள்ளன. அங்கு விற்பனை செய்யலாம். அதோடு வழக்கமான சிப்ஸ்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் விற்கலாம். தரமான நேந்திரன் சிப்ஸ், கடைகளில் சில்லரை விலையாக கிலோ ரூ.250 முதல் ரூ.260 வரை விற்கின்றனர். 

உற்பத்தி செய்பவர்களிடம் ரூ.160 முதல் ரூ.180க்கு கொள்முதல் செய்வதால் அவர்களுக்கு நல்ல லாபம் உள்ளது. தரமான சிப்ஸ்களுக்கு வரவேற்பு உள்ளது. சிப்ஸ்கள் 2 மாதம் வரை கெடாது. ருசியும் பலருக்கு பிடிப்பதால் சந்தை வாய்ப்பு தொடர்ந்து இருக்கும்.

தயாரிப்பது எப்படி

நேந்திரன் வாழைக்காய்கள் பச்சையாக இருக்க வேண்டும். சிறு கத்தியால் வாழைக்காயின் மேல் இருந்து கீழாக தோலில் கீற வேண்டும். கீறிய தோலுக்குள் உள்ளே கத்தியை நுழைத்து காய்க்கும், தோலுக்கும் இடையே நெம்ப வேண்டும். பின்னர் கை விரல்களால் நெம்பினால் தோலை முழுதாக உரித்து விடலாம். 

பின்னர் அதை நல்ல தண்ணீரில் அலசிய பின், காய்ந்த எண்ணெயில் நேரடியாக வட்டமாக சீவி போட வேண்டும். எண்ணெயில் விழும் நேந்திரன் துண்டுகள் பொரியும் போது சத்தம் வரும், அது லேசாக அடங்கும் போது ஒரு குழிக்கரண்டியில் உப்புத் தண்ணீரை அள்ளி எண்ணெயில் ஊற்ற வேண்டும். சட்டியில் சிப்ஸ் மீண்டும் சத்தத்துடன் பொரியும். 

சத்தம் அடங்கிய பின், சிப்ஸ்களை கரண்டியில் அள்ளி, தூக்கிப்போட்டு பிடித்தால் சலசலவென சத்தம் கேட் கும். அப்படி கேட்டால் நன் றாக வெந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதை வடிகட்டி சட்டியில் போட்டு சில நிமிடங்களுக்கு பிறகு அதை, 200, 250 கிராம் வீதம் எடை போட்டு பேக்கிங் செய்யலாம். 

தொழில் செஞ்சு சாதிக்க நம்பிக்கைதான் மூலதனம்


தொழில் செஞ்சு சாதிக்க நம்பிக்கைதான் மூலதனம்


தொழில் செய்ய அதிக முதலீடு தேவையில்லை... உழைப்புதான் தேவை. எந்த தொழிலையும் நேர்மையாகவும், முழு கவனத்துடனும் செய்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்கிறார் அருள். இவர், தன் மனைவி லதாவுடன் இணைந்து கொளத்தூரில் ‘அக்ஷயா குடில்’ என்ற சிற்றுண்டி உணவகத்தை நிர்வகித்து வருகிறார். இந்த தம்பதி தமது தொழில் அனுபவத்தை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்...

பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு, சொந்தமா பிளே ஸ்கூல் அல்லது முதியோர் இல்லம் அல்லது சின்னதா ஒரு உணவகம் ஆரம்பிக்க நினைச்சேன். ஆனா குடும்பம், குழந்தைகள்... வேலைக்கு போகும் கட்டாயம் ஏற்பட்டது. கை நிறைய சம்பளம் இருந்தாலும், மனதில் தொழில் செய்யணும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்கு அடிதளம் போட்டவர் பூ விற்கும் பெண்மணி ஒருவர்.

கூடை நிறைய பூ, விற்றால் தான் அவருக்கு வருமானம். ஒரு பெண் கஷ்டப்பட்டு தொழில் செஞ்சு குடும்பத்தை காப்பாற்றும் போது, நம்மால் ஏன் முடியாது என்று தோன்றியது. அன்று முடிவு செய்தேன் சொந்தமா தொழில் செய்யணும்ன்னு. இப்ப மார்க்கெட்டில் பிரபலமான தொழில் உணவகம். அதற்கான வேலைகளில் ஈடுபட்டோம். 

வீட்டிலேயே, சின்னதா சமையல் அறை, வேலைக்கு 3 பெண்கள்... தொழில் தொடங்க ஆயத்தமான பிறகு, முதல் நாள் 20 சாப்பாடு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு பெரிய நம்பிக்கையோடு அம்பத்தூர் பஸ் நிலையத்தில் ஒரு ஸ்டூலில் வைத்து விற்பனை செய்தேன். ஒரே ஒரு பாக்கெட் தான் விற்பனையாச்சு. அன்று பெரிய ஏமாற்றம் என்றாலும், அதையே சவாலாக மாற்றி, கொளத்தூரில் உள்ள ஆர்.டி.ஓ வாசலில் விற்றேன். அங்கு ஓரளவுக்கு நல்ல போனது. 

ஆனா தினமும் சாப்பாட்டு மூட்டையை தூக்கிக் கொண்டு தெருவில் நிற்க முடியாது. அதனால் சூப்பர் மார்க்கெட் வாசலில் சின்னதா ஒரு ஸ்டால் போட திட்டமிட்டோம். அண்ணாநகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அதற்கு அனுமதியும் கொடுத்தது. பர்கர், பானி பூரின்னு இல்லாமல் வித்தியாசமா இருக்க குழிப்பணியாரம், பால் கொழுக்கட்டை, சிக்கன் வடை, சிக்கன் மொகாலி, பூர்ண கொழுக்கட்டை, சிக்கன் பகோடா, அடை சட்னி, இடியாப்பம், புட்டு சென்னா... செட்டிநாடு உணவுகளை விற்க ஆரம்பிச்சோம். 

நன்றாக போனதால், கொளத்தூரில் உள்ள அவர்களின் மற்றொரு கிளையிலும் ஸ்டால் போட அனுமதி கிடைத்தது. ஆரம்பத்தில் பல நாட்கள் உணவுகள் வீணாகி உள்ளது. அளவு தெரியாமல் அதிகமா போட்டு வீணாகியிருக்கு. அமாவாசை, கிருத்திகை போன்ற நாட்களில் இங்குள்ள மக்கள் வெளி உணவுகள் சாப்பிட மாட்டாங்க. ஆனா அண்ணாநகர் வாசிகளுக்கு அந்த விதிவிலக்கு கிடையாது. இது தெரிந்துக் கொள்ளவே எங்களுக்கு நான்கு மாதம் ஆனது. அதன் பிறகு அதற்கு ஏற்ப பொருளை தயாரிக்கிறோம்

தற்போது, சிற்றுண்டி உணவுகள் மட்டும் இல்லாமல், வெரைட்டி ரைஸ், பிரியாணி போன்றவை ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம். டிபன் அயிட்டம் மற்றும் இல்லாமல் இது போன்ற உணவுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பிரியாணி. அதே போல் சீமந்த விழாவிற்கும் ஆர்டர் பேரில் சமைச்சு கொடுக்கிறோம். அலுவலகம் செல்பவர்கள் கூட உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள். அவர்களுக்கு தனியாக பேக் செய்து ஸ்டாலில் வைத்துவிடுகிறோம்.இவ்வாறு சொல்கிறார்கள்.

சூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு


சூப்பர் லாபம் தரும் சோப் தயாரிப்பு


சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர். அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் .நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். 

வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழு வதுமாக  போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள்  துவைப்பதற்கு சோப் களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில்  பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும். 

தயாரிப்பது எப்படி?

சோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும். 

அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.


சந்தை வாய்ப்பு

குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம்.கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. 

புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.

சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை. தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது.  

சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றதுதான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம்.  

ஞாயிறு, 25 நவம்பர், 2012

Tracks





பல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின?

பல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின?


கத்தோலிக்க சபை ஆரம்பமானது எப்படி? (How the Catholic Church Developed):
இந்த கத்தோலிக்க சபையின் உபதேசம் 3ம் நூற்றாண்டு வரை அறியப்படாத ஒன்றாக இருந்தது. பேதுருவிற்கு பின் போப் அந்த ஸ்தானத்தைப் பெற்றதாக அவர்களின் கூற்று. இந்த வரிசையில் ரோம கத்தோலிக்கம்தான் உண்மையான சபை என்று கோருகின்றனர். மேற் கூறப்பட்டவை இரண்டு காரணங்களால் (உண்மையினால்) பொய் என நிரூபிக்கப்படுகின்றது. 1. அப்போஸ்தலருடைய பணி(Apostles Office) யாருக்கும், அவர்களுக்குப்பின் தொடர்ந்து வழங்கப்படும் என்று புதிய ஏற்பாட்டில் ஆதாரம் இல்லை. 2. மேலும், ரோம கத்தோலிக்க பிஷப்கள், எப்பொழுதுமே புதிய ஏற்பாட்டின் போதனையுடன் முரண்பாடாகவே போதித்து வந்தனர். மேலும் அவர்கள் கடைப்பிடித்ததும் அப்போஸ்தலரிடமிருந்து முரண்பாடாகவே இருந்தது. ரோம கத்தோலிக்கர்களின் புகழ்ப்பெற்ற கூற்றாகியபேதுருவின் வழியில் பின் தொடர்ந்து வந்தவர்கள்தான் போப் என்பது, அவர்கள் அப்போஸ்தலரின் போதனை மற்றும் பயிற்சியில் இருந்து வேறுபடுவதினால் வலுவிழக்கிறது. மேலும் சத்தியம் ஒன்றே பின் தொடர்கிறது என்பது வேதாகம போதனை.
வழிவிலகுதல் முன்னறிவிக்கப்பட்டது: (1தீமோ 4:1-3)ஐ வாசிக்கவும்.
ரோமக் கத்தோலிக்க சபை புதிய ஏற்பாட்டின் சபை அல்ல. மேலும் அது தன்னுடைய வரலாற்றின்படியாககூட சபை அல்ல. அது விசுவாசித்திலிருந்து வழி விலகியதால் உண்டான ஒன்று. போப் என்பவர் பேதுருவின் வழிவந்தவர்கள் என்னும் கூற்று எந்த வகையிலும் ஆதாரமற்றது. முதலாவது, வேதாகமம் பேதுருவை முதன்மைப்படுத்தி எதுவும் கூறவில்லை. (அதாவது அவர் அப்போஸ்தலர்களில் எல்லாம் முதன்மையானவர் என்று) கல்லின் மீது என் சபையைக் கட்டுவேன் என்று இயேசு சொன்னது பேதுருவை அல்ல. (மத் 16:18,1கொரி 3:11ஐ வாசியுங்கள்) மேலும் அவர் ரோமபுரியில் இருந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. (இங்குதான் அவர் ரோமபுரியின் முதல் பிஷப்பாக இருந்தார் என்கின்றனர்) எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய ஏற்பாட்டில் ஒருவருடைய அலுவல் (Office)மற்றவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டதாக இல்லை. மாறாக, சத்தியமே தொடர்ந்து வழங்கப்பட்டது.
ஆங்கிலிக்கன் (எபிஸ்கோபல்) சபையின் ஆரம்பம்:- (The Begining of the Anglican  (Episcopal) Church):
நாமகர்ண சபைகளைப்பற்றிப் படிக்கும்போது, இங்கிலாந்தின் சபையின் வரலாற்றை ஆராய்வது அவசியம். அமெரிக்காவின் அநேக மதப்பிரிவுகள், இங்கிலாந்து மற்றும் அதின் இராஜ்யங்களில் இருந்து வந்தவையே. இங்கிலாந்தின் எல்லா கிறிஸ்தவ கூட்டங்களும், விட்பீ (Whitby) உள்ள சினாடில் 644 கி.பி.யில் ரோம கத்தோலிக்கத்துடன் கைக்கோர்த்தன. அடுத்த  நூற்றாண்டுகளாக இங்கிலாந்து ரோமுடன் தொடர்புக்கொண்டிருந்தது.
மார்ட்டின் லூத்தர், ரோம கத்தோலிக்கத்தில் இருந்து பிரிந்து சிறிது காலத்திற்குள் இங்கிலாந்து சபையும் ரோம கத்தோலிக்கத்தில் இருந்து பிரிந்தது. இங்கிலாந்து சபை உருவாகக் காரணமாக இருந்தவர் ஹென்றி VIII. இவர் கால்வின் அல்லது லூத்தரைப் போன்று அல்லாமல் மென்மையாகப் போராடியவர். ஹென்றி VIII மத உபதேசங்களை நன்கு கற்று, அதில் ஆவலும் கொண்டவர். இவருடைய ஆட்சியின்கீழ் அநேக ப்ராடஸ்டன்ட் தலைவர்கள் மரித்ததினால், இங்கிலாந்தின் நீரோஎன்று அழைக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் புரட்சிக்கு முக்கிய காரணம், ஹென்றி மற்றும் கேத்ரினின் திருமணம். இவள் பட்டத்திற்கு ஒரு ஆண் வாரிசைப் பெற்றுத்தரவில்லை. இவர்களின் ஒரே வாரிசு மேரி இளவரசி.ஆனால் இந்த நேரத்தில் ஒரு ராணியை இங்கிலாந்து விரும்பவில்லை. 18 ஆண்டுகளுக்குப்பின் தனது திருமணம் சபிக்கப்பட்டது என ஹென்றி நினைத்தார். தன்னை மணப்பதற்கு முன் சில காலமே வாழ்ந்த தன்னுடைய சகோதரனை கேத்ரின் திருமணம் செய்திருந்தார். தன்னுடைய சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்ததே அந்த சாபம் என்று அதற்கு அவர் லேவி 20:21ஐக் காரணம் காட்டினார்.
"ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம் பண்ணினால், அது அசுத்தம், தன் சகோதரனை நிர்வாணிமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்". (லேவி 20:21).
இதனால் ஹென்றி, கேத்ரினுடனான தன்னுடைய திருமணத்தை ரத்து செய்யுமாறு போப் இடம் கோரினார். போப் இந்த லேவியராகம சாபத்தை ஏற்றுக்கொண்டாலும், கேத்ரின் உறவினர் ரோம ராஜ்யத்தை ஆண்டதினால் விவாகரத்து செய்ய மறுத்தார்.
  தெளிவாக, இங்கிலாந்து சபை (ஆங்கிலிக்கன்) புதிய ஏற்பாட்டு சபை அல்ல. புதிய ஏற்பாட்டு சபை கத்தோலிக்கமோ, ப்ராடஸ்டன்டோ அல்ல. ஆனால் இந்த ஆங்கில சபை கத்தோலிக்கமும், ப்ராடஸ்டன்டும்,
  புதிய ஏற்பாட்டு சபை திருமுழுக்குப் பெற்ற விசுவாசிகளின் சரீரம். ஆனால் இந்த ஆங்கில சபை, சிறு குழந்தையிலேயே தெளிக்கப் பெற்ற விசுவாசிகள் மற்றும் விசுவாசியில்லாதவரின் கூட்டம்.
  புதிய ஏற்பாட்டு சபை கிறிஸ்துவினால் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலிக்கன் சபை ஹென்றி VIIIராஜாவால் ஆரம்பிக்கப்பட்டது.
  புதிய ஏற்பாட்டு சபை கிறிஸ்துவினால் தலைமை ஏற்கப்பட்டது. ஆங்கிலிக்கன் சபையின் தலைவர் இங்கிலாந்தின் இராஜா (அல்லது ராணி).
  புதிய ஏற்பாட்டு சபைக்கு உலகத்தில் தலைமையகம் கிடையாது. இந்த ஆங்கிலிக்கன் சபையின் தலைமையகம் இங்கிலாந்தின் கான்டிபரியில் உள்ளது.
மெத்தடிஸ்ட் சபை- முரண்பாடுகள்: (Methodist Church-Contradictions)
முதலாவது, மெதடிஸ்ட் கொள்கையாக 2:24-26 உடன் முரண்படுகிறது.
ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறு வழியாய் அனுப்பி விட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்தாயிருக்கிறது.
ஏனென்றால் விசுவாசம்மட்டுமே போதுமான உபதேசம் மற்றும் ஆறுதல் நிறைத்த முழுமையானது என மெதடிஸ்ட் ஒழுக்கம் (Methodist Discipline) கூறுகின்றது.
மற்றொன்று, வேதாகமம் ஒரு திருமுழுக்கைப் (ஞானஸ்நானம்) பற்றி கூறுகின்றது. ஆனால் மெதடிஸ்ட் ஒழுக்கம் 3 வகையான ஞானஸ்நானத்தைப் போதிக்கின்றது.
வேதாகமம் போதிக்கும் உண்மையான திருமுழுக்கு (மூழ்குதல்) அந்த 3ல் ஒன்றாக இருப்பினும், அது எப்பொழுதாவதுதான் பயிற்சி செய்யப்படுகிறது. பொதுவாக தெளித்தல் ஞானஸ்நானமேகொடுக்கப்படுகிறது. மேலும் கொலோ 2:12, ரோம 6:3,4 திருமுழுக்கே வேதாகமத்தின்படியானது என்கிறது.
மேலும், புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு அப்போஸ்தலரையோ, தீர்க்கதரிசியையோ, அங்கத்தினரையோரெவரென்ட் (Rev) என்று அழைத்ததாக இல்லை. மாறாக, சகோதரர் அல்லது ஊழியக்காரர் என்றே அழைக்கப்பட்டனர். மற்றும் புதிய ஏற்பாட்டில் இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் (அப் 11:26) என்று மட்டுமே அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு வேறு சிறப்புப் பெயர் (மெதடிஸ்ட்) காணப்படுவதில்லை.(1பேதுரு 4:16) நாம் ஒவ்வொருவரும் பெரோயர் பட்டணத்தாரைப்போல தொடர்ந்து படிக்கவேண்டும் (அப் 17:11) மற்ற எதையும்விட நாம் தேவ வார்த்தையையே விரும்புவோம்.
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். (யோ 14:15). இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம். (யோ 14:23).
பாப்டிஸ்ட்களின் வரலாறு: (A History of the Baptists):
சில உயரிய நோக்கங்களுடன், சில நேர்மையான மனிதர்கள் அவர்களுடைய காலத்தில் இருந்த குறைகளினால் இந்த பாப்டிஸ்ட் இயக்கத்தை ஆரம்பித்தனர். ஆனாலும், உண்மையான கிறிஸ்தவத்தைப் பற்றி அவர்கள் புரிந்துக்கொண்டதில் குறையிருந்தது. ஆகையால், வேதாகமத்தின் அதிகாரமின்றி அவர்கள் ஒரு புதிய நாமகர்ணக் கூட்டத்தை தொடங்கினர்.
தேவனால் அனுப்பப்பட்ட மனிதனாகிய ஸ்நானகன் என்று அழைக்கப்பட்ட (மத் 3:1) யோவான் (யோ 1:6) ஞானஸ்நானம் கொடுத்ததினால், தற்பொழுது உள்ள அவர் செயலினால் தொடங்கப்பட்ட இயக்கத்திற்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை. யோவான் ஸ்நானகன் மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானம் கொடுத்தார். தங்களுடைய சபை கிறிஸ்துவின் காலத்துடன் தொடர்புடையது என்றும், தாங்களே உண்மையான புதிய ஏற்பாட்டு சபை என்றும் கோருகின்றனர்.
ஆனால் கி.பி.1600ல் English Reformation Movementன் காரணமாக பாப்டிஸ்ட் சபைகள் தோன்றின. சுமார் 1606ல், ஆங்கில சபையின் பொதுக்கட்டுப்பாட்டை எதிர்த்து சிலர் வெளியே வந்தனர். இந்த இயக்கத்தின் ஒரு தலைவர் John Smyth (1554-1612) இவர் புதிய ஏற்பாட்டின்படி குழந்தை ஞானஸ்நானம் தவறு என்றும், தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பக்கூடியவர்கட்கே திருமுழுக்குத் தகும் என்று கூறினார். இதன் விளைவாக, ஞானஸ்நானத்தின் முழு அர்த்தமும் தெரியாத நிலையில்,Smyth தன் தலையில் தானே தண்ணீர் ஊற்றி ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார். பின்பு அவர், அவருடன் சேர்ந்த 40 பேருக்கும் இதேப்போன்று ஞானஸ்நானம் கொடுத்து ஒரு புது இயக்கம் -பாப்டிஸ்ட் சபை, John Smyth பாஸ்டராகக் கொண்டு ஆரம்பமானது.
பாப்டிஸ்டின் மற்றொரு பிரிவு 1616ல் தோன்றியது. இது ஹென்றி ஜேக்கப் (Hendry Jacob) (1563-1642) என்பவரால் லண்டனில் ஆரம்பமானது. இந்தக்கூட்டம் ஆங்க்லிக்கன் சபையோடு கொஞ்சம் உறவு வைத்திருந்தது. 1638ல் ஜான் ஸ்பில்ஸ்பரி (John Spilsbury) ஒரு புதிய கூட்டத்தை ஆரம்பித்தார். இதுகுறிப்பிட்ட பாப்டிஸ்ட் (Particular Baptist) என்று அழைக்கப்பட்டது. மேலும் இவர்கள் கால்ஷனிஸ்ட் கொள்கையான தேவன் உலகத் தோற்றத்திற்கு முன் தெரிந்துக்கொண்ட சில பேருக்காக மாத்திரமே இயேசு மரித்தார் என்பதை ஏற்றுக்கொண்டனர். மேலும் இவர்கள் திறந்த அங்கத்துவம் (Open Membership) அதாவது பிற சபைகளில் இருந்து எந்தவித மறுதிருமுழுக்குமின்று சேர்த்துக் கொண்டனர். இன்னுமொரு பாப்டிஸ்ட் சபை 1639ல் ரோஜர் வில்லியம்ஸ் என்பவரால் ரோட் தீவில் (Rhode Island)ஆரம்பிக்கப்பட்டது.
இன்று பாப்டிஸ்ட் சபைகள் சுமார் 100க்கும் மேற்பட்ட பிரிவுகளுடன் உள்ளனர். (www.baptist.org)இவர்களில் தாராளமான கொள்கை உடைய அமெரிக்க பாப்டிஸ்ட்லிருந்து மிகவும் கட்டுப்பாடானதெற்கத்திய பாப்டிஸ்ட் வரை ஆவார்.
1. 1 கொரி 1:10ல் தடை செய்யப்பட்டதை செய்பவர்கள் இந்த பாப்டிஸ்ட்கள். மேலும் அவர்கள்கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படுவதைவிட பாப்டிஸ்ட் என்றே அழைக்கப்பட விரும்புகின்றனர்.
2. வசனத்திற்குப் புறம்பாக ஒரு பாஸ்டர் மற்றும் உதவிக்காரர்களின் குழுவுடன் (Deacons) இவர்கள் உள்ளனர். சுயாதீனமான சபைகள் என்று இவர்கள் கூறினாலும், தெற்கத்திய பாப்டிஸ்ட்கன்வென்ஷனில் (Southern Baptist Convention) முடிவு செய்யப்படுவதையே சில நேரங்களில் கடைப்பிடிக்கின்றனர்.
3. புதிய ஏற்பாட்டில் இல்லாத ஒரு ஆராதனையை ஏறெடுக்கின்றனர். ஆராதனையில் இசை கருவிகளை பயன்படுத்துகின்றனர். இது புதிய ஏற்பாட்டு சபையில் இல்லை (எபே 5:19,கொலோ 3:16).
4. இரட்சிப்பு விசுவாசத்தின் மூலமே என்பதும் இவர்களின் கொள்கை. (மாற்கு 16:16,அப் 2:38,22:16) மேலும், சபையில் அங்கத்தினராக ஒருவர் வேண்டுமானால் மற்ற அங்கத்தினர்களில் வாக்குப்பதிவின்அடிப்படையில் நடந்தது.

From: jamakaran

CSI சபை உருவானது எப்படி? அதன் சட்டங்கள் என்ன?

CSI சபை உருவானது எப்படி?
அதன் சட்டங்கள் என்ன?


இந்தியா மீதான ஆங்கிலேயர்களின் ஆட்சி தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தது. மிஷனரிகளால் தாங்கப்பட்டும், ஊக்குவிக்கப்பட்டும் வருகின்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த சீர்திருத்த கிறிஸ்தவ (Protestant) சபைகளின் எதிர்காலமும் இச்சூழ்நிலையால் கேள்விக்குறியாக மாறிவிட்டிருந்தது. சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரசும், அதைத் தலைமையேற்று வழிநடத்திக்கொண்டிருந்த மகாத்மாகாந்தியும் ஆங்கிலேயர்களின் சர்வாதிகார ஆட்சிகாரணமாக வெள்ளையர்களின் மதமாக கிறிஸ்தவத்தை கருதி அவர்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவத்தையும் வெறுத்துக்கொண்டிருந்தனர். இதனால் அச்சமுற்ற, லண்டன் மிஷனரி சங்கத்தார், சுதந்திரத்துக்குப்பின் இந்தியாவில் இச்சபைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக லண்டன் மிஷன் சங்க நிர்வாகி திரு.லியோநார்டு அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். நிலைமையை ஆய்ந்த அவர் அறிக்கை ஒன்றை தலைமைச் சங்கத்திற்கு அளித்தார்.
  "கிறிஸ்தவ மிஷன்களுக்கும், திருச்சபைக்கும் நேராக சுதந்திர இந்திய அரசின் அணுகுமுறைகள் எதுவாக இருக்கும் என்பதுபற்றிய விவரம் தெளிவற்ற நிலையிலும், யூகங்கள்ஏற்படுத்துவதுமாகவே அமைந்துள்ளது. பொதுவாக கிறிஸ்தவ திருச்சபைகள் தடைகளையும், துன்புறுத்தல்களையும் எதிர்நோக்கியே உள்ளது" என்று விளக்கி லண்டனுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
  தென்னிந்தியாவில் சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் பல பிரிவுகளாக பிரிந்து நின்று செயல்பட்டுக் கொண்டிருந்தன. இச்சபைகளில் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லையெனில் எதிர்காலத்தில் அவர்களது நிலை அழிவுக்கு வழிவகுத்துவிடும் என்று மிஷனரிகள் கண்டுக்கொண்டனர். எனவே அவைகளிடத்தில் ஒரு ஐக்கியத்தை உருவாக்கி, அதை ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக நிலைபெறச்செய்ய வேண்டியது அன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையாயிற்று.
  எனவே தென்னிந்தியாவில் அன்று சுதந்திரமாக தனித்து நின்று செயல்பட்டுக்கொண்டிருந்த SPG, LMS, CMS, மெதடிஸ்ட், லூத்தரன், Seventh Day Adventist போன்ற சபைகளை ஒருங்கிணைத்து விடவேண்டும் என்ற தீர்மானத்தை அன்றைய மிஷனரிகள் மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இந்தியாவில் தளர்ந்துவருவதை முன்கூட்டியே உணர்ந்துக்கொண்ட மிஷனரிகளின் சபைகளின் ஐக்கியத்தைக்குறித்து முன்கூட்டியே முடிவெடுத்து அதற்கான முயற்சியிலும் இறங்கியிருந்தனர். இதன் முதல்நிலையாக 1908ம் ஆண்டு தென்னிந்தியாவில் இயங்கிக்கொண்டிருந்த (LMS) லண்டன் மிஷன் சபைகள், மதுரை அமேரிக்கன் மிஷன் மற்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் அமேரிக்கன் மிஷன்போன்றவைகள் ஒன்றுசேர்ந்து South India United Church - (S.I.U.C) என்று ஓர் அமைப்பை உருவாக்கினர்.
இந்த அமைப்பு மற்ற சபைகளுடன் தொடர்புக்கொண்டு அவைகளையும் S.I.U.C.யில் இணைவதற்கு அழைப்பு விடுத்தது. அதன் பயனாக 1920ல் Anglican சபைகள் இத்துடனே இணைவதற்கு தொடர்பை ஏற்படுத்தினர். இவர்களைத் தொடர்ந்து 1925ல் Methodist சபைகளும் இணக்கம் தெரிவித்தன. இந்த நடவடிக்கைகளின் பயனாக 1947ல் தென்னிந்திய திருச்சபை (Church of South India - CSI) என்ற மாபெரும் அமைப்பு உருவாயிற்று. இந்த அமைப்பு 1947 - செப்டம்பர் 27ம் நாள் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
"The Church of South India is the church constituted by the Union in 1947 of the Madras, Madurai, Malabar, Jaffna (Ceylon), Kannada, Telgu and Travancore Church Councils of the South India United Church, the South India province of the Methodist Church, comprising the Madras, Trichinoploy, Hyderabad of the Mysore Districts and the Diocese of Madras, Dornakal, Tinnelvely and Travancore-Cochin in the Church of India, Burma and Ceylon, to which in 1950 was added the North Tamil Church Council of the (S.I.U.C) South India United Church. (Chapter 1- Section 2 page 1 to the Constitution of CSI - 1952).
ஆனால் இந்த ஐக்கியத்தில் ஆர்காட் லூத்தரன் சர்ச் (TELC), தமிழ்நாடு இவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச் (TELC), செவந்த்டே அட்வென்டிஸ்டு சர்ச், இரட்சணிய சேனை (Salvation Army) சபைகள், பெந்தேகோஸ்தே சபைகள் போன்றவைகள் இணைவதற்கு முன்வரவில்லை.
CSI ஐக்கியத்தில் (LMS) லண்டன் மிஷன் சபைகள் இணைந்ததன்மூலம், அவைகள் கைக் கொண்டிருந்த தன்னாட்சி உரிமைகளையும், Congregational கோட்பாடுகளையும் நிரந்தரமாக இழந்துவிட்டு பேராயர் (Bishop) ஆட்சிமுறையையும், குருக்களின் (Rev) மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. தொடக்க கட்டங்களிலிருந்து அன்றே இதை எதிர்த்தவர்களும் இருந்தனர். (Bishop) பேராயர் ஆட்சிமுறையை முதல்முதலாக எதிர்த்தவர்கள் லூத்தரன் சபையினர் ஆவர். எனவே அவர்கள் இந்த இணைப்பில் சேராமல் வெளியேறிவிட்டனர். தவிரவும் Congregationalகோட்பாடுகளில் உறுதியாக நின்ற A.C.லெப்பீவர், H.V.மார்ட்டின் போன்ற மிஷனரிகளும் காலப்போக்கில் சமரசம் (Compromise) செய்து கொண்டு பேராயர் (Bishop) முறையை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் கன்னியாகுமரி பேராயத்திலும் CSI அமைப்புக்கு எதிராக சிலர் குரல் கொடுத்தனர். Formation of Church of South India is the step towards Catholisation of Churches என்று வக்கீல் H.ஜெயபால் அவர்கள் அன்றே எதிர்ப்பு குரல் எழுப்பினார். இந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் பொருட்டு இப்பேராயர் ஆட்சிமுறையைConstitutional Episcopacy - அதாவது சட்டத்திற்குட்பட்ட பேராயர் ஆட்சிமுறை என்று வர்ணித்து அன்றைய எதிர்ப்புகளைச் சமாளித்தனர். ஆனால் நடைமுறையிலோ இன்று பேராயர்கள் தன்னிகரற்ற சர்வாதிகாரிகளாக செயல்படுகின்றனர் என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.
CSI ஐக்கியம் உருவானதைத் தொடர்ந்து 1952ல் ஒரு சட்டபுத்தகத்தை (The Constitution of the Church of South India) உருவாக்கிக்கொண்டனர். இந்த விதி முறைகளை 2003ல் விரிவாக்கி போதிய திருத்தங்களைச் செய்து பேராயர் ஆட்சியை "Historic Episcopy" என திருத்தி அமைத்துக்கொண்டனர். இதில் பேராயர்தான் சர்வவல்லமையுள்ளவர் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அவர்களை தட்டிக் கேட்கவோ, தவறுகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கோ, CSI சினாடுக்கே பரிபூரண அதிகாரமோ உரிமையோ இல்லாதநிலை உருவாக்கப்பட்டது. எனவே பேராயர்கள் (Bishopமார்கள்) ஒரு காண்டா மிருகத்தைப்போன்று செயல்படத் தொடங்கினர். பிஷப்மார்கள் சாது போன்றத் தோற்றமளித்தாலும், அவர்களில் சிலரது இயற்கையான குணம் பீதியைத் தருவதாக உள்ளது. இதை சபை அங்கத்தினர்களால் அடக்குவதற்கோ அல்லது பிஷப்மார்களின் சர்வாதிகார குணத்துக்கு கடிவாளமிடுவதற்கோ இயலாமல் அவர்களைக்கண்டு சபைமக்கள் அச்சப்படுகின்ற நிலை உருவாயிற்று. இதைப்போன்று பேராயர்களையும் (Bishops), பிரதமப்பேராயரையும் (Moderator) எவராலும் தட்டிக்கேட்கவோ அல்லது அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு தண்டனை வழங்கவோ முடியாத நிலை உருவாயிற்று.
  இதனால்தான் பெந்தேகோஸ்தே சபை உபதேசத்தைக்கொண்ட பாஸ்டர் KP.யோகன்னானுக்குபேராயர் பட்டம் வழங்கிய CSI மாடரேட்டர் Most Rev.சாமுவேல், தென்கேரளா பேராயர்Rt.Rev.கிளாஸ்டன் மற்றும் குமரி பேராயர் Rt.Rev.தேவகடாட்சம் போன்றோர்களின் மீது சட்ட மீறுதலுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் CSI சினாடு தடுமாறியது. தவிரவும் இந்த பெரிய சாட்சியில்லாத தவறுக்காக அந்தந்த அத்தியாட்சாதீனங்களும் இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. இதனால் இவர்கள் இரட்டை கொம்புடைய சக்திக் கொண்டவர்களாக மாறிப்போயினர்.
  இந்த சட்டதிட்டங்களை எல்லாம் முழுமையாக CSI-யின் உறுப்பினர்களான அத்தியட்சாதீனங்கள்(தற்பொழுது 22 அத்தியட்சாதீனங்கள் உண்டு) ஏற்றுக்கொள்ளாமல், அவைகளுக்கென்று தனித்தனி Constitution-ஐ உருவாக்கிக்கொண்டு பேராயர்களின் தங்கள் இஷ்டம்போல் ஆட்சி நடத்துகிறார்கள். இருப்பினும் இந்த CSI சினாடு Constitutionனோ அல்லது பேராயConstitutionனோ அரசு பதிவு பெறாத ஒரு கோட்பாட்டுப் புத்தகமாக இதுவரை செயல்படுத்தி வருவது விந்தையே. இத்தகைய சட்டக்கோட்பாடுகளால், CSI நிர்வாகம் ஒரு பெடரல் (ஒரு பொதுநோக்குடன் ஒருங்கிணைந்த அல்லது சுதந்திர கூட்டு ஐக்கியம்) நிர்வாகமானதால் அதன் வழிகாட்டுமுறையில் மட்டும் ஒன்று போல வெளிப்பார்வைக்கு தோற்றமளிக்கிறது. "The Governing Principle of the Church is that it believes that by this Union the Church in South India will become a more effective instrument for God's work......" (Chapter 11- Article 2) இதுதான் CSIயின் முக்கிய நோக்கமே தவிர அதில் இணைந்திருக்கின்றCSI கிறிஸ்தவர்களின் சமூக, சமுதாய, பொருளாதார அரசியல் மற்றும் கல்வி வளர்ச்சிகள் அதன் கோட்பாட்டில் கொண்டு வரப்படவில்லை. அதனால்தான் பிரதம பேராயரும் (Moderator), (Bishop)பேராயர்களும், (Rev, Pastor)ஆயர்களும் 24 மணி நேரமும் கிறிஸ்தவ ஆராதனை மற்றும் மதச்சடங்குகளை மட்டுமாகச் செய்துவருகின்றனர். தவிரவும் பேராயங்களில் பத்து இலாகாக்களைஉருவாக்கி அதன் தலைவர்களாக பத்து போதகர்களை நோக்கமற்ற நிலையில் நியமித்து பத்து குளிரூட்டப்பட்ட அறைகளில் (AC Rooms) முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். சபையோரின், குறிப்பாக படித்துவிட்டு உரிய வேலைகள் கிடைக்காமல் உழலுகின்ற இளைஞர்களை, தங்களது வாழ்வாதாரத்துக்கு உகந்தவாறு Human Resource Development திட்டங்களை இவர்கள் செயல்படுத்துவதில்லை. போதகப் பெருமக்கள்மட்டும்தான் தகுதியானவர்கள் என்பதைப்போல் காண்பித்து CSI கிறிஸ்தவ சமுதாயத்தையே ஊனமுற்றதாக்கிவிட்டனர். இந்த நிலைமை மாற்றப்படவேண்டும்.
CSIயில் இணைந்த பல்வேறு திருச்சபைகளின் ஸ்தாவர ஜங்கம சொத்துக்களைப் பரிபாலனம் செய்தவற்கு CSI Synod அமைப்புச் சட்டதிட்டங்களில் வழிவகை செய்யப்படவில்லை. அவைகளை நிர்வகிப்பதற்கு இவர்களாகவே வேறொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்தியன் கம்பனி சட்டம் 1913 (Act VII - of 1913)ன் அடிப்படையில் 26.09.1947ல் Churches of South India Trust Association என்ற நிறுவனத்தை வரிசை எண் 46-ஆகவும் பதிவு எண் CIN - U 93090 TN 1947 NPL000346 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது CSI சினாடு அமைப்பை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு ஒருநாள் முன்பாகவே இந்த CSI-TAயை இந்தியன் கம்பனி சட்டத்தின்கீழ் 26.09.1947ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த CSI-TAயை ஏழு தனி நபர்களால் பதிவு செய்திருக்கிறார்கள். இது ஒரு தனிகம்பனி என்ற அந்தஸ்துதான் இதற்கு உண்டு. இப்படியொரு Trust-ஐ பதிவு செய்வதற்கு ஊர் பொதுச்சபையினர்(General Body of the CSI) இந்த ஏழு நபர்களுக்கும் அதிகாரம் வழங்கவில்லை என்பது சட்டமீறலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இருப்பினும் இதன் முக்கிய நோக்கமாவது.
Article (3). (a). "To act and allow its name to be used as trustees or agent whether alone or jointly with any person of persons for the Church of South India, and accordingly to cqure by all lawful means immovable and movable property and to apply both Capital and Income there of and the proceeds of the sale or mortgage there of for or towards all or any of the objects herein after specified, with in the territories of India".
(b). ".......... and in particular to assist pecuniarily or otherwise all or any of the societies, clubs, trusts, organization, schools, colleges, ashrams, hostels, boarding houses hospitals, dispensaries, Industries, homes, refugees and other charities now existing or here after to exist in connection with the said Church with in the said area whether the same are confined to the said area are not.
(c). To acquire sites for buildings and to build alter or enlarge such buildings and to maintain and endow Churches, Chapels, burial grounds, schools, Colleges, ashrams, hostels, boarding houses, hospitals, dispensaries Church and mission halls, prayer houses, residences for ministers, doctors, School masters and school mistresses and other workers, refugees, homes, industrial establishment and other buildings to be used in connection with the work of the said church with in the said area.............." இவ்வாறு 17 நோக்கங்களை இந்த Trust Association  கொண்டுள்ளது. இருப்பினும் இது ஒரு Charitable Trust ஆக பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியா கம்பெனி போன்று இதுவும் CSIயும் ஓர் வியாபார நோக்குடைய கம்பெனியாக தோற்றத்திலும் செயலிலும் காணப்படுகிறது. The Hindu Religious Charitable Endowment போன்று இதையும் "The CSI Religious And Charitable Endowment and trust" என்று பதிவு செய்திருந்தால் CSIயின் நோக்கம் தர்ம காரியங்களாகவும் இருந்திருக்கும். அதனால்தான் இதன் ஷரத்துக்களில் Charitable Activitiesக்கு முக்கியத்துவம் காணப்படாமல், மற்ற காரியங்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த CSIஅமைப்பின் கீழ் வருகின்ற ஸ்தாவர ஜங்கம சொத்துக்கள் அனைத்தும் இந்த CSI Trust - Associationக்கு பாத்தியதைப்பட்டதாகும். ஆகையால் இவைகள் அனைத்தும் பணமதிப்பில் இதன் Assets ஆகிறது. எனவே இதற்கான கணக்கு விவரங்களை இந்த CSI - TA பேணிக்காத்து அதன்மூலம் கிடைக்கின்ற வருவாயை CSI சபை உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படவேண்டும் என்பதும் இதன் நோக்கம் ஆகும்.
ஆனால் நடைமுறையில் இந்த Trust Association அவ்வாறு செயல்படவில்லை. இதன் சுவாதீனத்தில் உள்ள அனைத்து ஸ்தாவர ஜங்கம சொத்துக்களின் விவரங்களை Register of Assets புத்தகத்தில் அதாவது Capital Investment என்பதாக கணக்கு வைத்திருக்கவேண்டியது இந்த CSI-TAயின் தார்மீக கடமைகளில் ஒன்றாகும். இது மிக முக்கியமானதும்கூட. ஆனால் இந்த Association அவ்வாறு செய்யவில்லை. ஆகையால் அதன் தணிக்கை அறிக்கையில், தணிக்கையாளர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
"We have not verified the title deeds in respect of these properties. No value have been assigned to the immovable properties of the trust. We are informed that the rental income from properties let and sale proceeds, if any of the immovable properties are received directly by the units and Sub-units are accounted by them or by the beneficiaries directly”.
(See annexure to the audit report of even date for the year 2000-2001 compiled by M/s.Gopal and Moorthy-Chartered accountant dated 16th October 2001).
எனவே CSI - TA நிர்வாகம் அதற்கு பாத்தியப்பட்ட சொத்துக்களின் விவரத்தை ஆய்வுக்குத்தராமல் மறைக்கப்பட்டுள்ளதின் நோக்கம் எதுவாக இருக்கும்? அரசாங்கத்தையும், கிறிஸ்தவ மக்களையும் ஏமாற்றும் ஒரு முயற்சியாகத்தான் இது இருக்கமுடியும். 2001ம் ஆண்டு தணிக்கைக் கணக்கின் அடிப்படையில் CSI - TAயின் முதலிருப்பு (Capital) ரூ.49.48 கோடி மட்டுமே. 2006 தணிக்கையின்படி அதன் முதலிருப்பு ரூ.59.79 கோடியாக தரப்பட்டுள்ளது. இது CSIயின் உண்மை நிலையை விளக்குவதாக இல்லை. உதாரணமாக கன்னியாகுமரி CSI பேராயத்தில்மட்டும் அதன் ஸ்தாவர ஜங்கம சொத்துக்களின் மதிப்பு, இன்றைய சந்தை நிலவரப்படி ரூ.5000 கோடிக்கு மேல் இருக்கும். இதைவிட கூடுதல் சொத்துக்கள் திருநெல்வேலி CSI அத்தியட்சாதீனத்துக்கு உண்டு. சென்னை CSIஅத்தியட்சாதீனத்துக்கோ இவைகளைவிட பல நூறு மடங்கு சொத்துக்கள் உண்டு. CSI சினாடில் 22 அத்தியட்சாதீனங்கள் உண்டு. இவைகளின் கூட்டுச் சொத்து மதிப்பை துல்லியமாகக் கூறிட இயலாது என்றாலும், மொத்த மதிப்பு ஒரு மில்லியன் கோடிக்கு (One Million Crores) குறையாமல் இருக்கும். இவ்வளவு Assets-ஐ கொண்ட CSI - TAயின் Capital வெறும் 59.79 கோடி என்று ஆடிட்டுக்கு காண்பிக்கிறார்கள் என்றால் யார் இதை நம்புவார்கள்! இந்த முழுசொத்து மதிப்பை CSI - TA ஏன் கணக்கில் கொண்டுவராமல் மறைத்துள்ளது? இந்த Trust Associationக்கு இவ்வளவு சொத்து உண்டு என்பதை அரசு அறிய நேர்ந்தால், இதை நிர்வகித்து பரிபாலனம் செய்வதற்கு என்று HR and CE போன்ற ஒரு Endowment நிர்வாகத்தை அரசு நிச்சயம் நிறுவிவிடும் என்ற பயத்தால்தான் இதன் சொத்து மதிப்பை தணிக்கைக்கு உட்படுத்தாமல் ஆரம்பத்திலிருந்தே மறைத்துவருகின்றனர். அவ்வாறு ஒருCharitable Endowment-ஐ வைத்துவிட்டால் பிரதம பேராயரும், பேராயர்களும், ஆயர்களும் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற மற்றவர்களின் ஆடம்பர வாழ்வுக்கும் பணத்தை தங்கள் இஷ்டம்போல் செலவு செய்வதற்கும் தடங்கல் உருவாகிவிடும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இதை அவர்கள் மறைக்கின்றனர். இது இன்று நேற்று முதற்கொண்டு மறைக்கப்பட்டது அல்ல. CSI - TAயும், CSI - சினாடும் உருவாக்கப்பட்ட நாள் தொட்டு அதாவது 1947ம் வருடம் தொட்டு இன்றுவரை இந்தஇருட்டடிப்பு CSIயில் நடந்து வருகிறது. இது தமிழக அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் தெரியாமல் இருப்பதற்கு நியாயமில்லை. வேண்டுமென்றுதான் அரசும், அதிகாரிகளும் இதை கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர் என்று தோன்றுகிறது. இதை சரிகட்டுவதற்கென்று ஒருசெல்வாக்குமிக்க பேராயர் ஒருவர் தி.மு.க அரசின் செல்லப்பிள்ளையாக செயல்புரிந்து வருகிறார். நாங்கள் சிறுபான்மையினர், பரம ஏழைகள், எங்களுக்கு வசதிகள் இல்லை. எனவே எங்களை விட்டுவிடுங்கள் என்று இவர் சொல்கிறார் போல் தோன்றுகிறது.
இதன் தொடர்பால் பிரதமப் பேராயரும் வேறு சில பேராயர்களும் பல தில்லுமுல்லுகளை துணிந்து செய்துவருகின்றனர் என்பதை கடந்தகால பண ஊழில்கள் CSIயில் ஏற்பட்டதை அறியும்போது உறுதியாகிறது. சான்றுக்கு கூறுவதானால் அண்மையில் சுனாமி நிவாரண நிதியாக கிடைத்த ரூ.17.63 கோடிகளைச் சரியாக குறிப்பிட்ட சுனாமி நிவாரணப் பணிக்களுக்கு மட்டுமாகச் செலவு செய்யாமல்வேறு காரியங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவிரவும் 7.50 கோடி ரூபாய் டையோசிஸ் பணத்தை எடுத்து மோசடி செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டு பல முக்கிய புள்ளிகளை சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
  இந்த ஊழலில் கன்னியாகுமரி அத்தியட்சாதீனப் பேராயர் மாமறைத்திரு ஜீ.தேவகடாட்சம்,கிருஷணா - கோதாவரி அத்தியட்சாதீனப் பேராயர் மாமறைத்திரு ஜி.தெய்வாசீர்வாதம், மத்திய கேரளா பேராயர் மாமறைத்திரு.தாமஸ் சாமுவேல், சென்னை பேராயர் மாமறைத்திரு வி.தேவ சகாயம்,மதுரை-ராமநாதபுரம் பேராயர் மாமறைத்திரு எ.கிறிஸ்டோபர் ஆசீர், வடகேரள பேராயர் மாமறைத்திருகே.பி.குருவில்லா, தென் கேரளா பேராயர் மாமறைத்திரு J.W.கிளாஸ்டன், தூத்துக்குடி-நாசரேத் பேராயர் மாமறைத்திரு ஜெபச்சந்திரன், திருச்சி-தஞ்சாவூர் முன்னாள் பேராயர் மாமறைத்திரு D.J.ஸ்ரீனிவாசன்,திருநெல்வேலி முன்னாள் பேராயர் மாமறைத்திரு ஜெயபால் டேவிட், மற்றும் வேலுர் கிறிஸ்தவ ஆலோசனை மன்ற இயக்குனர் திரு.B.J.பிரசாந்தம் போன்றோருக்கு பங்கு உண்டு என்று அறியப்படுகிறது. இவர்களில் பல பிஷப்மார் தன்னை இதிலிருந்து விடுவித்துக்கொள்ள பெரிய அரசியல்வாதிகளை இப்போது கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர் என்று தகவல் வந்துக்கொண்டிருக்கிறது. இம்முறை இவர்களையெல்லாம் சட்டக்கூண்டில் ஏற்றாமல் விடுவதில்லை என காவல்துறையினர்தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வெட்கப்படவேண்டியது அனைத்து CSIகிறிஸ்தவர்களேயாவர்கள்.
CSI-TAயின் யூனிட்டுகள் மற்றும் அதன் கீழ்வருகின்ற யூனிட்டுகளும் CSIயின் சொத்துக்களிலிருந்துகிடைக்கின்ற வாடகை மற்றும் விற்று கிடைக்கும் வரவுகளை அவர்களே கணக்கில் வைத்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மையென்றாலும் ஸ்தாவர ஜங்கம சொத்துகளின் சந்தை விலையை அவைகளின் தணிக்கைக் கணக்குகளில் Capital-ஆக வருவதில்லை, கருதுவதுமில்லை. கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற Sub-Unit நிறுவனங்கள் CSI-TA-வுக்கு வாடகை பணமாக தந்து வருவதைப் பார்த்தால், இவைகளின் உரிமையாளர் அதாவது பட்டாதார்CSI-TA மட்டும்தான் என்பது உறுதியாகின்றது. ஆகையால் பணவரவை மறைப்பதால் CSI-TAயானதுஅரசை ஏமாற்றி வருவது புலனாகிறது. CSI-TA-யில் காணப்படுகின்ற ஸ்தாவர ஜங்கம சொத்துக்கள் அனைத்தும் CSI-TA சம்பாதித்தது அல்ல, மக்கள் அல்லது நன்கொடையாளர்களால் காணிக்கையாக கொடுக்கப்பட்டவைகள் ஆகும்.
  எனவே இவைகள் அனைத்தும் CSI கிறிஸ்தவ மக்களுக்குமட்டும் பொதுவானதும், உரிமைப்பட்டதும் ஆகும். ஆகையால் இவைகளை விற்று காசாக்குவதற்கு இந்த CSI-TAஅமைப்பிற்கு மக்கள் அதிகாரம் எதுவும் வழங்கவில்லை.
  எனவே CSI-TAவால் விற்கப்பட்ட அனைத்து சொத்துக்களையும் நீதிமன்றங்கள் வாயிலாக மீட்கவேண்டியது CSI கிறிஸ்தவர்களின் தலையாய கடமையாகும்.
  ஆனால் இன்றைய CSI கிறிஸ்தவர்கள் அதற்கு முன்வரமாட்டார்கள் என்பது திண்ணம். ஏனெனில் அவர்களை CSI அமைப்பின் மும்மூர்த்திகளான Moderator, Deputy Moderator மற்றும் General Secretaryஆகியோர் சொத்து மீட்புக்கு முயற்சி செய்பவர்களை அல்ல, இது விஷயமாக கோர்ட்டுக்கு போவோர்களை Ex-Communicate (சபை நீக்கம்) செய்துவிடுவர் என்ற பயம் இவர்களை ஆட்கொண்டு உள்ளதால் பலர் இதிலிருந்து பின் வாங்கிச்சென்றுவிடுகின்றனர். அதனால்தான் சொல்கிறோம். இனி CSIசொத்துக்களை காப்பாற்றுவதற்கு (Tame) அரசாங்கம் ஒன்றால்தான் இயலும். அது எவ்வாறு முடியும் என்று அரசு சிந்திக்கலாம்.
  இந்து சமயத்தாருக்குச் செய்ததுபோன்று, இஸ்லாமிய சமயத்தாருக்குச் செய்தது போன்று, CSIகிறிஸ்தவ சமயத்துக்கும் ஒரு Endowment அமைத்து இதன் நிர்வாகத்தையும், சொத்துக்களையும்வழிமுறைப்படுத்தவேண்டியது இன்றைய முக்கிய தேவையாகின்றது. ஏனெனில் இந்த நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மக்கள் பணத்தை சரிவர கணக்கு வைக்காமல் கபளிகரம் செய்வதும்,CSIயின் ஸ்தாவர சொத்துக்களை தேவையில்லாமல் விற்று விரயம் செய்வதும் அன்றாட நிகழ்ச்சியாக்கிவிட்டது.
  குறிப்பாக வெளிநாட்டிலிருந்து CSIக்கு கிடைக்கின்ற உதவித் தொகையைக்கூட இவர்கள் கையாடல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இது உலகமறிந்த விஷயமாகிவிட்டதை அறிவோம்.
"The movable and immovable properties of the CSI-TA and Synod of CSI are the properties of CSI Christians only. They are peoples property and it is the legitimate duty of a popular Government to safe guard the Christian peoples properties from the Valturious Presbyterians and dangerous episcopally ofdained ministers".
CSI TA நிர்வாகத்தை "Christian Religious and Charitable endowment"ன் கீழ்கொண்டு வரவேண்டியது அரசின் கடமையாகும். இந்த நிர்வாகத்தை சீர் செய்திட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறவர்கள். அரசுக்கு சட்டப் பூர்வமான, விரிவான விண்ணப்பம் தயார் செய்து மக்களிடத்தில் கையொப்பம் பெற்று அளித்தல் வேண்டும். இதற்கென கையொப்ப இயக்கம் ஒன்று தொடங்குவது நல்லது.
  தமிழக தலைமைச் செயலகத்திற்கு உங்கள் கூக்குரல் எட்டவேண்டும். அப்பொழுதுதான் அதை என்னவென்று நம் தமிழக முதல்வர்.கலைஞர் அவர்கள் நிச்சயம் கேட்பார். அவரால்தான் இந்த வானளாவிய அதிகாரத்தை பெற்ற சபை தலைவர்களுக்கு கடிவாளம் இடமுடியும். CSIசொத்துக்களை அதன் வேலியே பயிர் மேயாமல் காப்பாற்ற முடியும் என்று நம்பப்படுகிறது.
  கிறிஸ்தவர்களுக்கு மற்ற மதங்களைப்போன்று ஒரு அரசாங்க Charitable Endowment வைத்தால் மட்டுமே கிறிஸ்தவ சமுதாயத்தை இன்றைய அழிவுப்பாதையில் இருந்து காப்பாற்றிட முடியும் என்பது இப்போது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிறது.

From: Jamakaran