பக்கங்கள்

திங்கள், 26 நவம்பர், 2012

உப்பு அதிகமாகிவிட்டதா?


உப்பு அதிகமாகிவிட்டதா?


*சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டதா? கவலை வேண்டாம். ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நறுக்கிப் போட்டுக் கொதிக்க வையுங்கள். உப்பு அல்லது காரம் சரியாகிவிடும்.

ரவா லட்டு செய்யும்போது....

*ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து தயாரித்தால், ரவா லட்டின் சுவை மேலும் கூடும்.

எண்ணெய் காறலை போக்க...

*வடை, போண்டா தயாரித்த எண்ணெய் காறலாக இருக்கும். இதை போக்க ஒரு வழி. எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்துவிடவும். இப்படி செய்தால் எண்ணெயின் காறல் குறைந்துவிடும்.

தக்காளி சூப் தயாரிக்கும்போது...

*வீட்டில் தக்காளி சூப் தயாரிக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ். சூப் தயாரிக்கும் போது நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை அதில் போட்டு விட்டால், சூப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாப்பிட சுவையாக இருக்கும்.

கத்தரிக்காய் வாடாமல் இருக்க...

*கடையில் பிரெஷ் ஆக வாங்கி வைத்த கத்தரிக்காய் வாடி வதங்கி விடுகிறதா? கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக