பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

கால்நடை பராமரிப்பு


கால்நடை பராமரிப்பு


கால்நடைகளை கொண்டு வேளாண்மை செய்வது. விவசாயிகள் வாழ்வாதாரமாக காணப்படுகிறது. விவசாயத்தின் முக்கிய பயிர் தோல்வி அடையும் போது, தங்களது கால்நடைகளை விற்பனை செய்து, ஈடுகட்டலாம். பணத் தேவை ஏற்படும் போது கால்நடைகள் கடன் அட்டையாக திகழ்கிறது. இம்மாதிரியான மாற்று முறைகள், விவசாயிகளை அதிக வட்டி விகிதத்தில் பணம் வழங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற மனிதர்களிடம் இருந்து பாதுகாக்கிறது.

தொழில்நுட்ப பின்நகர்வு:
கேரளா கோழிக்கோடு மாவட்டத்தின் கூரசண்ட்த் கிராமத்தை சார்ந்த திரு. சீஜித், தனது 6 ஏக்கர் நிலத்தில் 200 தென்னை மரங்களை வளர்கிறார். இது ஆண்டுக்கு ரூபாய், 50,000 வருமானம் ஈட்டி தருகிறது. தீவன புல் மற்றும் வாழை ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. இத்தீவன புல் அவரது இரண்டு மாடுகளுக்கும் உணவாகவும் மேலும் வாழையின் மூலமாக கூடுதல் வருமானமாக ரூபாய் 5000 வரையிலும் பெறுகிறார்.
பண்ணை உற்பத்தியும், வருமானத்தையம் பெருக்கும் விதமாக வேளாண் அறிவியல் மையத்தை நாடினார். அங்கு வழங்கப்பட்ட பயிற்சியின் மூலம், 2007 ஆம் ஆண்டு முதல் அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் பறவைகளான கோல்டன் சில்கி (Golden Silky), கொச்சின் பேண்டாம் (Cochin Bandom), ஒய்ட் சில்கி (White Silky) போஸ்லைன் (Phoseline), ஜப்பானிய பேண்டாம் (Japanese Bandom), புளு கொச்சின் (Blue Cochin), கோல் டன் மில்லிபிளோர் (Golden milli flour) சில்வர் மில்லிபிளோர் (Silver milliflour), சில்வர் லேஸ் (Silver lace) போன்ற நன்கு தேவை இருக்கும் பறவைகளை வளர்த்து ஆரம்பித்தார்.

பறவைகளுக்கு ஒர் இருப்பிடம்:
ரூபாய் 60,000 செலவில், பறவைகள் தங்குவதற்கான கொட்டகை உருவாக்கினார். பட்சிகளுக்கான உணவு மற்றும் மருத்துவ செலவாக, ஒரு நாளுக்கு ரூபாய் 150 தேவைப்படுகிறது.
ஒரு ஜோடி பறவை ரூபாய் 400 முதல் 600 வரையிலும், ஒரு முட்டையின் விற்பனை விலை ரூபாய் 30-40 வரையிலும், உள்ளூரில் விற்பனை செய்கிறார். சராசரியாக ஒரு மாதத்திற்கு 80 பறவைகளும், 30 முட்டைகளும் விற்பனையாகிறது. மேலும் ஒரு கோர்வையாக 150 முட்டைகளை பொரிக்கும் அடைகாப்புக்கருவியும் வைத்துள்ளார். இதன் விலை 7500 ரூபாயாகும்.
மேம்படுத்தப்பட்ட இனங்களான கலிங்கா பிராவுன் (Kalinga brown) மற்றும் கிராம சி (Gramasree) வகைகளை ஒரு வயது குஞ்சுளாக கேரள கோழி வளர்ப்பு பண்ணையிலும், கேரளா வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்தும் பெற்றும் முட்டைகோழிகளாக வளர்க்க தொடங்கினார். இவ்வாறு முதன்மை விஞ்ஞானியான முனைவர் டி.கே. யாகோப் (Jacob) கூறுகிறார். இவ்வகை குஞ்சுகள் 50 நாட்கள் வளர்க்கப்பட்டு, பின்பு விற்பனை செய்யப்படுகிறது.

சாண எரிவாயு நிலையம்:
மேற்கண்டவாறு வளர்க்கப்பட்ட குஞ்சுகள் ரூபாய் 50க்கு விற்கப்படுகிறது. இதற்கு ஒரு நாளுக்கான செலவாக ரூபாய் 29 தேவை
திரு.சிஜித் அவர்கள் இவ்வாறாக, இதுவரை 1500 கோழிகளை ஐந்து கோர்வையாக குழுக்களாக மொத்தம் ரூபாய் 31,500 லாபம் கிடைக்குமாறு விற்பனை செய்துள்ளார். மேலும் இவர் கோழி கழிவு மற்றும் சாணத்தை கொண்டு எரிவாயு நிலையம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்புக்கு: திரு.சிஜீத் ஜான், தேக்கயல் வீடு, கூரசண்த் அஞ்சல், கோழிக்கோடு - 673527 கேரளா
தொலைபேசி : 0496 2660661
மேலும் (பல்வேறு) பயிற்சி வகுப்புகளுக்கு
முனைவர் டி.கே.யாகோப், முதன்மை விஞ்ஞானி
11SR
கோழிக்கோடு - 673 012
மின்அஞ்சல்:jacobtk@spices.res.in
அலைபேசி : 9447539967

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக