பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு...


கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு...




கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும்,மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது.

5
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளதுகடுகில்கருங்கடுகுவெண்கடுகுநாய்க்கடுகுமலைக்கடுகுசிறுகடுகு என பலவகை உண்டு.இது சிறு செடி வகையைச் சார்ந்ததுஇந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது.வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும்இதன் மேல்தோல்கறுப்பாக இருக்கும்.
சத்தான கடுகு

கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதுகடுகில் செலினியம் அதிகம்செரிந்துள்ளதுஇதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது.கடுகில் உயர்தர கால்சியம்மாங்கனீஸ்ஒமேகா 3 கொழுப்பு அமிலம்இரும்பு,புரதம்நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.

மைக்ரேன் தலைவலி

கடுகானது மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறதுஅதேபோல்ருமட்டாய்டு ஆர்த்தடீஸ்குறைந்த ரத்த அழுத்தம் போன்ற வைகளைகுணமாக்குகிறதுதோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
ஜீரணக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந் தாகும்.ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டுதினமும் உணவில் கடுகை சேர்த்துக்கொள்வது நல்லதுகடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி,உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன்அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர்குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.
உணவு உண்பதற்கு முன்பு கருப்பு கடுகினை 20 நிமிடம் ஊறவைத்து அரைத்துபாலில் கலந்து குடித்து வர ஜீரணசக்தி கிடைக்கும்அஜீரணக் கோளாறால்வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும்இந்த வயிற்று வலிநீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.
சைனஸ் கோளறு நீங்கும்

ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும்இந்தஇருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும்கடுகுப்பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன்தலைவலியுடன் உண்டாகும் இருமல்மூக்கில் நீர் வடிதல்அதிக உமிழ்நீர் சுரத்தல்போன்றவை குறையும்.
விஷ முறிவு மருந்து

சிலர் தெரிந்தோ தெரியாமலோ விஷம் சாப்பிட நேரிட்டால் அவர் களுக்கு முதலில்கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன்உள்ளிருக்கும் விஷமானது வெளி யேறும்சில வகையான காணாக்கடிகளுக்குகடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.
சிறுநீர் கோளாறுகள்

கடுகுத்தூள்அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல்கிளறி அதை இருமல்இரைப்பு இருப்பவர்கள் மார்புதொண்டைப் பகுதிகளில் தடவிவந்தால் இருமல் இளைப்பு நீங்கும்தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப்போடலாம்கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்நன்கு பிரியும்
கருப்பை கட்டி

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமை யலுக்குபயன்படுத்தி வருகிறார்கள்கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதயநோயை தடுக்கும்கருப்பைக் கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண்ணெய் பெரும்பங்குவகிக்கிறதுஒவ்வொரு முறையும் கடுகு மற்றும் சீரகம் போன்றவற்றைத் தாளிக்கநீங்கள் கடுகெண்ணெயைப் பயன்படுத்தவும்வயிற்றின் மீது வெளிப்பூச்சாகவும்கடுகெண்ணெயை வெதுவெதுப்பாகப் பூசிகாலையில் வெந்நீரில் குளித்துவரவலிநீங்கும்கடுகானது பெண்களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்குகிறது. 
நல்ல உறக்கத்தை தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக