பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

ஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி

ஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி












உடல் பலம் பெற
சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.
இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
==============================================
வயிறுப் பொருமல் நீங்க
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல்வயிற்று வலிஅஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை
லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
ஓமம்மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம்சேர்த்து அரைத்து காலைமாலை என இருவேளையும் கிராம் அளவு எடுத்து சாப்பிட்டுவந்தால் பொருமல்கழிச்சல்வயிற்றுக் கடுப்புநீங்கும்.
=============================================================
புகைச்சல் இருமல் நீங்க
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம்கடுக்காய் தோல்,முக்கடுகுசித்தரத்தைஅக்கிரகாரம்திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலைமாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
===================================================
மந்தம்
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று,அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம்சுக்குசித்திரமூல வேர்ப்பட்டைஇம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடிசேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
=============================================
பசியைத் தூண்ட
நல்ல தூக்கமும்நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும்தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி,அதனால் மனமும் பாதிக்கப்படும்.
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும்வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும்ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

====================================================
சுவாசகாசம்இருமல் நீங்க
காற்றும்நீரும் சுகாதாரமாகவும்சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும்.தற்போதைய காலகட்டத்தில் காற்றும்நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்றுநீரால் சுவாசகாசம்இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.
ஓமம் - 252 கிராம்
ஆடாதோடைச் சாறு - 136 கிராம்
இஞ்சி ரசம் - 136 கிராம்
பழரசம் - 136 கிராம்
புதினாசாறு - 136 கிராம்
இந்துப்பு - 34 கிராம்
சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கிதினமும் காலைமாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி.கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல்,சுவாசகாசம்அஜீரணம் போன்றவை குணமாகும்.

================

1. 
மேலும் குடலிரைச்சல்இரைப்புபல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.
2. 
ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.
3. 
ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தைமுதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
4. 
ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.
5. 
ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
6. 
சோர்வு நீங்க ஓமத்தண்­ர்
நம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பாஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பாதேங்காயுடன் ஓமத்தை அரைத்துக்போடுவோம்.
ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு,நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து,சூடான சாதத்தில் ஊற்றிஒரு சொட்டு நெய்ஊற்றி,உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.
7. 
வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து.
8. 
தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.
9. 
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
வயிற்று வலி ஏற்பட்டால்ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்புபெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில்வயிறு லேசாகி விடும்.
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.
மார்ச்சளி இருந்தால்ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம்
பல்வலி இருந்தால்இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால்ஓமஎண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
ஓமப் பொடி சிறிதுஉப்பு சிறிது ஆகியவற்றைமோரில் கலந்து குடித்தால்நெஞ்சில் பிடித்துள்ள சளிவெளியேறும்.
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால்சோர்வு பயந்து ஓடி விடும்!.
***
10. 
தொப்பையை குறைக்க
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பைகாணாமல் போய்விடும்.

11. 
ஓமம்சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"
ஓமம்சீரகம் கலவை " வயிற்றுக் கோளாறு,அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. "ஜெலூசில் " போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க்க விளைவுகளும் கிடையாது.
செய்முறை :
ஓமம்சீரகம் சம அளவு சேர்த்துவாணலியில் கருகாமல் வறுத்துசிட்டிகை உப்பு சேர்த்து 'மிக்சியில்'போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட20 நிமிடங்களுக்குப் பிறகுஒரு தேக்கரண்டி,குவியலாகசாப்பிடலாம்.
மந்த வயிற்றுக்கான அறிகுரி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக "கல்யாண சமையல் சாதம் " சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும் !

12. 
இடுப்பு வலி நீங்க:
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்துஅதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
இனியும் தாமதியாமல் ஓமம் என்னும் அருமருந்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளையும்உங்களையும் ஆரோக்கியமானவராக மாற்றி நீண்ட ஆயுளோடு இனிதே வாழுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக