பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

குடும்பத்தில் மனைவியின் பங்கு

குடும்பத்தில் மனைவியின் பங்கு

இன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டம் வகுத்துவிட்டு, இந்த கருத்துக்களை தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு என்ன பயன் கிடைக்கும் ? (What Is In It For Me -WIIIFME) என்பதையும் முகப்பு பக்கங்களில் தெரிவித்து இருப்பர். அதுபோல , வேதத்தை நாம் கற்கும் போதும் , அது நமக்கு பயன் தரும் அடிப்படையில் ஒரு WIIIFME யுடன் அமைக்கப்பட்டுள்ளது.
வேதத்தின் வெளிச்சத்திலே உங்கள் வாழ்கையின் பாதையை சீர்தூக்கிப் பாருங்கள். 'உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது' என்று தாவீது சங்கீதத்தில் கூறுவதை நாம் வாசித்திரிப்போம். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் போதகத்தை கேட்பதோடு நின்று விடுகிறோம். அல்லது வாசித்த வேத பகுதியை நம்முடைய வாழ்கையில் நடைமுறை படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க தவறி விடுகிறோம். இன்று குடும்பங்களில் மனைவியின் பங்கு குறித்து வேதத்தில் தேவன் என்ன கூறியுள்ளார் என்று பார்போம். பின்னர் அவ்வசனங்களுக்கு நம்முடைய பதில் என்னவென்றும் சிந்திப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கும். தேவன் நமக்கு உதவி செய்வாராக.
 தனிப்பட்ட வாழ்க்கை
 1. I தீமோத்தேயு 2:10 - தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் , தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிகொள்ளுகிற ஸ்திரிகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
• என்னுடைய உடை தேவ பக்தியுள்ள பெண்ணாக என்னை உலகிற்கு காட்டுகிறதா?
• என்னுடைய வெளிப்புற தோற்றம் அடக்கமாக, ஒழுக்கமாக மற்றவர்கள் மதிக்கத்தகும் வகையில் உள்ளதா?
2. I பேதுரு 3:3,4 - புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது ;
• என்னை காண்கிறவர்கள் உள்ளான அலங்காரத்தை காண்கிறார்களா ? புறம்பான ஆடம்பரத்தை காண்கிறார்களா ? ஆவியின் கனிகளினால் நிறைந்த நன்றியுள்ள இருதயம் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது .
• ஒரு நாளில் நாம் எவ்வளவு நேரம் ஆவிக்குரிய காரியங்களிலும், வெளிப்புற அழகிற்கும் செலவு செய்கிறோம் ?
3. I தீமோத்தேயு 2:11 -ஸ்திரியானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளகடவள்
பவுல் தன்னுடைய உடன் ஊழியனான தீமோத்தேயுவிற்கு, தேவனுடைய வீட்டில் விசுவாசிகள் நடக்க வேண்டிய வகையை குறித்து முதலாம் கடிதத்தை எழுதுகிறார். (I தீமோத்தேயு 3:15) எபேசு பட்டணத்தில் இருந்த சபை, பலவிதமான வேற்று உபதேசங்களை பின்பற்றி வந்தது. அங்கே ஊழியம் செய்ய அனுப்பிவிடப்பட்ட தீமோத்தேயுவிற்கு பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார். (1தீமோத்தேயு 3,4 ) இந்த எபேசு சபையின் ஸ்திரிகளில் சிலர், பொய்யான உபதேசங்களுக்கு செவிசாய்த்து, வழிவிலகி சென்றனர். (2 தீமோத்தேயு 3:6,7 ; 4:1-3) அமைதலுள்ள ஆவியோடு மாயமற்ற உபதேசத்திற்கு செவிகொடுக்காமல், போதனை செய்கிறவர்களோடு தர்க்கித்தனர். எனவே பவுல், ஸ்திரிகள் நற்போதனைகளை சாந்தமாய் கேட்டு , இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதன்படி அமைதலான ஜீவியம் தங்கள் குடும்பங்களில் காணப்பட கற்றுக்கொள்ளகடவர்கள் எனக் கூறுகிறார்.
• இன்று நாம் சபையின் செய்திகளை அமைதலோடு கற்றுகொள்கிறோமா? மற்றவர்களுக்கு உபதேசிக்கிரவர்களாய் காணப்படுகிறோமா?
• அல்லது,சபையின் நடைமுறைகளை பிறரிடம் விமர்சிக்கிறோமா?
• நம்முடைய ஜீவிதம் அமைதலாய் உள்ளதா?
4. I தீமோத்தேயு 6:7, 8 - போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை , இதிலிருந்து ஒன்றும் கொண்டுபோவதுமில்லை
• இன்று என் வாழ்க்கையின் எந்த இடத்திலே 'போதும்' என்று இருக்க வேண்டும்?
• அளவுக்கு அதிகமாக, அல்லது வசனத்திற்கு புறம்பாக எதை நான் விரும்புகிறேன்?
குடும்ப வாழ்க்கை
1. எபேசியர் 5:23, 24 - கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுப் போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்;...ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்த காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
• குடும்பத்தின் தலைவன் கணவர். அது தேவனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட கடமை. என்னுடைய கணவரை குடும்பத்தின் தலைவராக காண்கிறேனா? அவர் என்னை வழி நடத்த அனுமதிக்கிறேனா?
• சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவது போல நான் என் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா?
• என்னுடைய எண்ணங்களிலும், செய்கையிலும் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா?
2.எபேசியர்5:33"... மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்"
• நான் என் கணவரை மதிக்கிறேன் , அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் என்பதை அவர் உணர்ந்துள்ளாரா?
• என்னுடைய வார்த்தையினாலும், நடக்கையினாலும், ஆலோசனைகளினாலும் மற்ற பெண்கள் தங்கள் கணவரை மரியாதையோடு காண மாதிரியாய் உள்ளேனா?
3. I தீமோத்தேயு 2:15-"அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
• பிள்ளைகளை பெற்று, தேவ பக்தியுள்ளவர்களாய் வளர்ப்பதே தேவன் எனக்கு கொடுத்த பெரிய பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டது உண்டா?
• என்னுடைய நடக்கையிலும், பேச்சிலும், செயலிலும் பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாக இருக்கின்றேனா?
4.II தீமோத்தேயு 3:15-"கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக் கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்கு தெரியும்"
• என்னுடைய பிள்ளைகளுக்காக தினமும் ஜெபிக்கின்றேனா?
• அவர்களுடைய இருதயத்தில் தேவ வார்த்தையை விதைக்க உழைக்கின்றேனா?
• சுய வேலைகளை பாராமல், பிள்ளைகளை சபைக்கு அழைத்து வந்து, தேவ வார்த்தைகளை கேட்கச் செய்கிறேனா?
• சபையின் விசுவாசிகளோடு பிள்ளைகள் ஐக்கியமாக உள்ளார்களா?
• தேவனையும் அவருடைய சத்தியத்தையும் கேட்டு புரிந்துகொள்கிறர்களா?
வீடு
1. நீதிமொழிகள் 14:1 -" புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரியோ தன் கைகளினாலே அதை இடித்துப்போடுகிறாள்"
• இந்த இரண்டு ஸ்திரிகளில் யாருடைய குணம் என்னிடம் உள்ளது. என்னுடைய நோக்கமும் செயலும் எதை நோக்கி செல்கிறது?
2.நீதிமொழிகள் 31:27 -"அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்"
• என்னுடைய வீட்டின் காரியம் கிரமமாக உள்ளதா?
• நேர்த்தியான , தூய்மையான வீடாக உள்ளதா?
• கர்த்தர் விரும்பாத பொருட்கள் வீட்டிலே உண்டா ?
• என்னுடைய வீட்டில் நான் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியங்கள் என்னென்ன?
3. I தீமோத்தேயு 5:14-"...விவாகம் பண்ணவும், பிள்ளைகளை பெறவும், வீட்டை நடத்தவும் ..."
• வீட்டின் காரியத்தை குறித்து தேவன் கொடுத்த திட்டம் இதுவே - இதை குறித்து என்னுடைய எண்ணம் என்ன? வீட்டுவேலைகளை நான் பொறுப்புடன் செய்கிறேனா?
• தேவன் விரும்பும் வண்ணம் வீட்டை நிர்வாகிக்க விருப்பம் உண்டா?
சமுதாயம்
I தீமோத்தேயு 5:10-"பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரப்படுகிறவர்களுக்கு உதவி செய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து ,இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால் ..."
• நம்முடைய வீடு ஊழியங்களுக்கு திறந்து கொடுக்கப்படுகிறதா?
• நம்மை சுற்றி உள்ளவர்கள் தேவனை அறிய வாய்ப்புள்ளதா?
• சபையின் ஊழியங்களில் சகோதரிகளோடும், பிள்ளைகளோடும் பங்கு கொள்கிறேனா?
• மற்ற விசுவாசிகளின் தேவைகளை அறிந்து வாழ்கின்றேனா? அவர்களுக்கு என்னால் ஆறுதல் உண்டா?
மேன்மையான நோக்கம்
1.தீத்து 2:4, 5-"தேவவசனம் தூசிக்கப்படாதப்படிக்கு பாலிய ஸ்திரிகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும் , வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி ,நற்காரியங்களை போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரிகளுக்கு புத்திசொல்லு. "
• மேற்கூறிய வசனத்தின் வரிசையின் படி நான் விருப்பம் கொள்கிறேனா? அல்லது, வேறு ஒரு ஒழுங்கு முறையில் வாழ்க்கையின் திட்டங்களை தீட்டுகிறேனா?
• என்னுடைய குடும்பத்தை நேசித்து அவர்களது தேவைகளை சந்திக்க போதுமான அளவு முயற்சி செய்கிறேனா?
• என்னிலே சுயநலமற்ற , தியாகமான, சேவிக்கிற அன்பின் மாதிரியை என் கணவரும், பிள்ளைகளும் காண்பார்களா?
• நான் ஆவியிலே எளிமை, அன்பு, சுய அடக்கம் கொண்டவளாக உள்ளேனா?
• என்னுடைய வாழ்கை வேதம் சித்தரிக்கும் குணசாலியான ஸ்திரிபோல உள்ளதா?
மேற்கண்ட வசனங்கள் பெண்களை குறித்ததான தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறது. அதோடு தொடர்புடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்திருப்பீர்கள். நாம், எங்கு குறைவு பட்டு காணப்படுகிறோமோ அங்கு தேவ ஆவியானவர் உதவிக் கொண்டு சரி செய்து கொள்வோம். பின் ஒரு நாளில் நம்முடைய ஆண்டவரின் சந்நிதானத்தில் மாசற்ற பிள்ளைகளாய் நிற்க வழி செய்வோம்.

கர்த்தரை கனப்படுத்தும் குடும்பம்

கர்த்தரை கனப்படுத்தும் குடும்பம்

தாய்மார் கற்றுக் கொடுக்க வேண்டிய சில நல்லொழுக்கங்கள்
தேவ பக்தி என்பது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு தானாக வருவது கிடையாது. அதிக ஜெபத்தொடும் கவனத்தோடும் விசுவாசியான பெற்றோர்கள் நல்லொழுக்கங்களை உருவாக்க ஏற்ற பயிற்சி கொடுத்து முயற்சி எடுக்கும் போதுதான் பிள்ளைகள் தேவ பக்தியுள்ளவர்களாய் நடக்க முடியும். எனவே தான் பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் நடத்து என்று கர்த்தரின் வசனம் சொல்லுகிறது. சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுப்பது தாயின் முக்கிய கடமையாகும்.
ஜெபத்தோடு கர்த்தரிடம் ஞானத்தைப் பெற்று இதைச் செய்யும் பொது ஏற்ற காலத்தில் நம் பிள்ளைகள் ஒலிவ மர கன்றுகளைப் போல் கர்த்தருக்கு மகிமையைக் கொண்டு வருவார்கள்.
1. வேதம் வாசித்து ஜெபிக்க கற்றுக் கொடுப்பது:
உபாகமம் 6:6,7; சங்கீதம் 1:2, யோசுவா 1:8, I தீமோத்தேயு 3:15 : வேத வசனத்தை கருத்தாக போதித்து, அதைக் குறித்து எப்போதும் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று உபாகமத்தில் வாசிக்கிறோம். குடும்ப ஜெபங்களிலும் மற்றும் நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் வேதாகமக் கதைகளை இரண்டு வயது முதல் சொல்லி கவனமாய் கேட்கும்படி செய்ய வேண்டும். அது அவர்கள் காதுகளில் தொனித்துக் கொண்டும்,இருதயத்தில் பதிக்கப்பட்டதுமாய் இருக்கும்படி, அவர்கள் வயதிற்க்கேற்ப,புரியும்படி எளிய முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சாமுவேல், தாவீது,தானியேல் மற்றும் சகேயு இவர்களைப் பற்றிய சிறிய பல்லவிகளைப் பாடும்படி கற்றுக் கொடுத்து பின் அதற்கேற்றக் கதைகளை மனதில் பதியும்படி எழுத கற்றுக் கொண்ட பின் அவர்களோடு சேந்து அந்த கதைகளைப் படிக்கலாம் ஒரு சிறிய வசனம் தினமும் மனப்பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். வேதம் வாசித்தப் பின் ஜெபிப்பது மிக அவசியம். எவ்வாறு ஜெபிப்பது என்பதை கற்றுக் கொடுத்து ஜெபிக்க செய்ய வேண்டும் . இது அனுதினம் கொடுக்க வேண்டிய ஆவிக்குரிய பயிற்சி . அன்றாட வாழ்க்கையிலும் வேதத்தில் படிக்கும் சத்தியங்களைப் பொருத்தமான நேரத்தில் சம்பந்தப்படுத்தி பேசி புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.
2. ஒழுங்கு:
ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திற்கும் தூணாக நிற்பது ஒழுங்கு. நம் தேவன் ஒழுங்கை விரும்புகிறார் . சகலமும் ஒழுங்கும் கிரமமுமாய் செய்யப்பட வேண்டும் என்று பவுல் அப்போஸ்தலன் போதிக்கிறார் . நாம் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை, வேதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.கர்த்தருடைய பிரதிநிதியாய் அவருக்கென்று பிள்ளைகளை கொடுக்க ஒழுங்கு அவசியம் . பிள்ளைகளை நேசிப்பதினால் ஒழுங்கு வேண்டும். தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளை தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணும். பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் போது நற்பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்.
சகோ பில்லி கிரகாமின் மனைவி ரூத் கிரகாம் சொல்வது என்னவென்றால், பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அத்தனை நல்லொழுக்கங்களும் அதற்குரிய பயிற்சியும் பத்து வயதுக்குள்ளாகவே கற்றுக் கொடுக்க வேண்டும்.சிறுவர்களாய் இருக்கும் போது நன்மை தீமை இன்னதென்று தெரிந்து கொள்ள வேண்டும்.ஒழுங்கு இருக்கிற இடத்தில் தான் பாதுகாப்பு இருக்கும்.தன் எல்லையை மீறாமல் என்னும் வளையத்திற்குள் பிள்ளைகள் வளரும் போது தீமையினின்று காக்கப்படுகிறார்கள் . பொல்லாங்கன் அவர்களைத் தொட முடியாது. தாயும் தகப்பனும் சேர்ந்து ஜெபித்து பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் ஞானத்தைத் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. கீழ்ப்படிதல்:
(1 சாமுவேல் 15:22) நற்குணங்கள் உருவாக அடிப்படைத்தேவை கீழ்ப்படிதல் .
லியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம் . பிள்ளைகள் இரண்டு வயதுக்குள் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும். சொன்னவுடனே கீழ்ப்படிய வேண்டும்.மனப்பூர்வமாக சந்தோசமாக பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.முறுமுறுக்காமல் கீழ்ப்படிய வேண்டும். அரை மனதோடு கீழ்ப்படியக் கூடாது.
பெற்றோரைக் கனம் பண்ணுவதற்கு அடையாளம் கீழ்ப்படிதல். வீட்டில் கீழ்ப்படியக் கற்றுக் கொண்ட பிள்ளை சபையிலும்,பள்ளியிலும்,சமுதாயத்திலும் கீழ்ப்படிகிறவர்களாக இருப்பார்கள். அதிகாரத்தை எதிர்க்கிறவர்களாக இருக்க மாட்டார்கள் .
4. வேலை செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்:
(நீதி 10:4, 2, தெச. 3:10, நீதி.6.6) சோம்பேறித் தனத்திற்கு இடங்கொடாமல் சுறுசுறுப்புள்ளவர்களாய் இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.தினந்தோறும்சில சிறிய வேலைகளை அவரவர் வயதிற்கு ஏற்ப தாய்க்கும், தகப்பனுக்கும்உதவி செய்யும்படிக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது சுயமரியாதையும் , பொறுப்பும் உள்ள பிள்ளைகள் ஆவார்கள்.நன்றாக செய்த வேலையை பாராட்ட வேண்டும்.குறைகளை அன்போடு எடுத்துச் வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்ய வேண்டும்.பிறர் தனது வேலையைச் செய்வார்கள் என்று நினைக்கக் கூடாது. இப்பழக்கம் பிற்காலத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும். உன் கைக்கு நேரிடுவது எதுவோ அதை உன் முழு பெலத்தோடு செய் என்கிற வசனத்தை ஞாபகப்படுத்தி பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.(பிரசங்கி 9:10)
5.தேக ஆரோக்கியத்திற்க்கேற்ற நற்பழக்கங்களை ஒழுங்காக கடைப்பிடித்தல் :
தினந்தோறும் காலையிலும் இரவிலும் பல் துலக்கி முகம் கழுவுவது, தினந்தோறும் குளிப்பது, வெளியே போய் வந்தபின் முகம்,கை கால்,கழுவுவது சாப்பிடும் முன் ஆகாரத்திருக்கு நன்றி சொல்லி ஜெபிப்பது,நகங்களை அதிகம் வளர விடாமல் அவ்வப்போது வெட்டி சுத்தப்படுத்துதல், குளித்த பின் அழுக்கு துணிமணிகளை குளிக்கும் அறையில் தொங்கவிடாமல் துவைக்கும் துணிகளுக்குக் குறிப்பிட்டஇடத்தில் வைப்பது, காகிதத் துண்டு, குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவது, பிறருடைய பொருட்களை அவர்கள் அனுமதியின்றி எடுத்து உபயோகிக்கக் கூடாது இது போன்று நற்பழக்கங்களை மிகச் சிறிய வயது முதற்கொண்டே கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்
6.பணத்தை சரியான முறையில் உபயோகிக்கக் கற்றுக் கொடுத்தல் :
பிள்ளைகள் மிகவும் சிறியவர்களாய் இருக்கும்போது காசு கையில் கொடுத்து சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை தங்கள் இஷ்டப்படி வாங்கி சாப்பிட அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்குத் தேவையான யாவையும் பெற்றோரே வாங்கி கொடுப்பது நல்லது.அவர்களாகவே போய் வாங்கும்போது சுத்தமில்லாத , ஈ மொய்த்த பண்டங்களை வாங்கி பல வியாதிகள் வரக் கூடும்.மேலும்,சிறிய வயதில் பணத்தை எவ்வாறு உபயோக்கிப்பது என்பதும் அவர்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வரும்போது பேருந்து செலவு போன்ற அத்தியாவசிய காரணமாக பணத்தை அவர்கள் கையில் கொடுக்க நேரிடலாம்.எனவே, பணத்தை எவ்வாறு செலவழிப்பது, எவ்வாறு சேமிப்பது, எவ்வாறு ஏழை எளியவருக்குக் கொடுத்து உதவுவது என்பதைக் கற்றுக் கொடுப்பது அவசியம்.கர்த்தருக்கும் ஊழியங்களுக்கும் தாராளமாய் கொடுக்க பழக்குவிக்க வேண்டும்
7.ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடக்க கற்றுக் கொடுத்தல்:
"கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ளுங்கள்" என்கிற போதனையை சிறு வயது முதல் கற்றுக்கொடுக்க வேண்டும்.பெற்றோர், சகோதர, சகோதரிகள், தாத்தா, பாட்டி மற்றும் முதியோர் பெரியோர் அனைவரிடமும் மரியாதையுடன் அன்பாய்ப் பழகவேண்டும். பெரியோருக்கு முன்பாக எழுந்து நின்று கனம் பண்ணுதல், வணக்கம் செய்தல், மரியாதையுடன் உட்காருவது போன்றவை அவசியம். கற்றுக் கொள்ள வேண்டியவை. 'நன்றி ', ' தயவுசெய்து ',' வணக்கம் ' போன்ற மரியாதைக்குரிய வார்த்தைகளை மிகச் சிறிய குழந்தைகளுக்கே கற்றுக் கொடுக்க வேண்டும்.
8.தங்கள் உடைமைகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளக் கற்றுக் கொடுத்தல் வேண்டும்.
சிறிய குழந்தைகள் இயல்பாக சுய நலமுடையவராய் இருப்பார்கள் . இதைத் தவிர்க்க தாயானவள் பிள்ளைகள் தங்கள் விளையாட்டுப் பொருள்,உணவு இவற்றை தன் சகோதர சகோதரிகளோடு பகிர்ந்து கொடுக்க உற்சாகப்படுத்த வேண்டும். சண்டை போடுவதையோ ,ஒருவரையொருவர் அடிப்பதையோ தவிர்த்து அன்பாகப் பழகச் செய்ய வேண்டும். சிறு வயதில் எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளக் கற்றுக் கொண்டால் பெரியவர்களான பின் எல்லோரோடும் சுமுகமாக பழக முடியும் . ஒருவரையொருவர் மன்னிக்க, சகித்துக் கொள்ள தாய் தான் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
அருமை தாய்மாரே ,மேற்கூறிய நற்பண்புகள் நம் குழந்தைகளிடம் குழந்தைகளிடம் உருவாக அனுதினமும் ஜெபித்து செயல்படுவோமாக .

எல்லோரும் அவளை புகழுகிறார்கள்!

எல்லோரும் அவளை புகழுகிறார்கள்!

உலகில் வாழ்கிற நாம் எப்படிபட்டவர்களாய் வாழ வேண்டும் என்பதற்காக பவுல் கலாத்தியர் நிருபத்தில் 5ம் அதிகாரம் 22,23 வசனங்களில் எழுதியிருப்பதை படிப்போமா?

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

இப்படிப்பட்ட ஆவியின் கனிகளை பெற வேண்டிய- பெண்களாகிய நாம் வாழ்வில் மிகவும் பொறுப்பான இடத்தில் இருக்கிறோம்.

கணவர், பிள்ளைகள், உறவினர், பெற்றோர் யாவரையும் பராமரிக்கும், வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் நற்பணியில் நாம் இருக்கிறோம்.

பெண்களாகிய நாம் பெலவீன பாண்டங்கள்தான்-
ஆனாலும், இயேசப்பா நம்மை ஆவியின் கனிகளை பெற்று நல்வாழ்வு வாழ சொல்கிறார்.

நாம் மனமகிழ்ச்சியோடு அனைவருக்கும் செய்யும் கடமைகளை செய்யும்போது, நம் பெலவீனமுள்ள சரீரத்தை பெலமுள்ளதாக்குகிற தேவனாகிய கர்த்தர் நம்மோடிருந்து நம்மை பெலப்படுத்துகிறார்.

கிறிஸ்துவுக்குள் வாழும் நம் அனைவரும் நீதிமொழிகள் 31ஆம் அதிகாரத்தில் சொல்லிய ஸ்திரியைபோல இருக்க வேண்டும்.

அவள்-
அதிகாலை எழும்பி வேலை செய்கிறாள்.

தூரத்திலிருந்து ஆகாரத்தை கொண்டு வருகிறாள்.

இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுக்கிறாள்.

தன் வேலைகாரிகளுக்கு படியளக்கிறாள்.

வயலை விசாரித்து வாங்குகிறாள்.

திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

சிறுமைப்பட்டவர்களுக்கு தன் கையை திறந்து ஏழைகளுக்கு தன் கரங்களை நீட்டுகிறாள்.

தன் வாயை ஞானம் விளங்க திறக்கிறாள். தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.

அவள் சோம்பலின் அப்பத்தை புசியாமல் தன் வீட்டு காரியங்கள் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாய் இருக்கிறாள்.

அவள் பிள்ளைகள் எழும்பி அவளை பாக்கியவதி என்கிறார்கள்.

அவள் புருஷன், அநேக பெண்கள் குணசாலிகளாய் இருந்தது உண்டு. நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்ப்பட்டவள் என்று அவளை புகழுகிறான்.

கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்த்ரியே புகழப்படுவாய்.

ஆம், கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்த்ரியே நீ புகழப்படுவாய்.

- Hepsibai Ambrose

அற்புத சுகம் தரும் இயேசு!

அற்புத சுகம் தரும் இயேசு!

இயேசு தன்னுடைய ஊழியப்பாதையில் அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். அநேக மக்கள் அவரிடம் வந்து நன்மை பெற்று சென்றார்கள். வியாதியஸ்தர்கள் அவரிடம் வந்து சுகம் பெற்று சென்றார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்போம்.

வார்த்தையினால் சுகம்

நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவன் தன்னுடைய வேலைக்காரனில் ஒருவன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். இயேசுவை பற்றி கேள்விபட்ட அந்த நூற்றுக்கு அதிபதி, தன்னுடைய வேலைக்காரன் சுகம் பெறுவதற்காக அவரை நோக்கி சென்றான்.

அவன் இயேசு தன் வீட்டில் பிரவேசிக்க தான் பாத்திரன் இல்லாதவன் என்று எண்ணி, "நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்" என்றான். அநேக அதிகாரங்களை கொண்டவனாக அவன் இருந்தும், அவனது எண்ணங்களையும், அவன் வார்த்தைகளையும் கேட்ட இயேசு, "இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை" என்று சொல்லி அவனது வேலைக்காரனை தமது வார்த்தையினால் சுகப்படுத்தினார்.

ஆடையை தொட்டதால் சுகம்

இயேசுவும் அவருடைய சீடர்களும் பெரும் மக்கள் கூட்டத்தோடு போய் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒரு பெண் இயேசுவின் பின்னால் சென்று அவரது ஆடையின் தொங்கலை தொட்டாள். அதிலிருந்து வல்லமை பிறந்ததை அறிந்த இயேசு என்னை தொட்டது யார்? என்று கேட்டார். தெரியாது என்று அவருடனே கூட இருந்தவர்கள் கூறினார்கள்.
அப்போது அந்த ஸ்திரி, இயேசுவின் முன் வந்து விழுந்து தான் அவருடைய தொங்கலை தொட்டதையும், அவளுடைய பெரும்பாடு வியாதி அவளை விட்டு நீங்கியதையும் கூறினாள். இயேசுவின் ஆடையின் தொங்கலை தொட்டதன் மூலம் அவளின் பெரும்பாடு வியாதி அவளை விட்டு நீங்கியது.

இயேசு தொட்டதினால் சுகம்

நாயீன் ஊருக்கு இயேசு போனார். அவ்வூரின் வாசலருகே மரித்த ஒருவனை அடக்கம் செய்ய வந்தார்கள். அவன் தாய்க்கு ஒரே மகன். அவளோ ஒரு விதவை. அநேக ஜனங்கள் அவருடனே கூட வந்தார்கள். கர்த்தர் அவளை பார்த்து அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி பாடையின் அருகில் வந்து பாடையை தொட்டார். அவன் உயிரோடு எழுந்தான்.

- இவ்வாறு இயேசுவின் வார்த்தையின் மூலமாக, அவரை பற்றிகொள்வதன் மூலமாக, அவர் தொடுதலின் மூலமாக, இவ்வுலக பாடுகளில் இருந்து நாம் சுகம் பெற முடியும்.
- Hepsibai Ambrose

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து- என்னை காண்கிற தேவன்! என்னை காக்கிற தேவன்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து- என்னை காண்கிற தேவன்! என்னை காக்கிற தேவன்!

 "இயேசுவின் மகிமை"யை படித்து, இயேசுவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டேன் என்று - தஞ்சாவூர் மாவட்டம் "வல்லம்" அருகில் உள்ள "பிள்ளையார்பட்டி"யை சேர்ந்த அன்பு சகோதரர் எஸ்.எம்.ஞானசேகரன் சொல்கிறார்.

இவர், "இயேசுவின் மகிமை"க்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

"கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, தங்களின் "இயேசுவின் மகிமை" மூலம், 1991-ம் ஆண்டு இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்.

"இயேசுவின் மகிமை"யில் முன்பக்க அட்டையில் போடப்பட்டு இருந்த "நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. நான் கைவிடுவதும் இல்லை"- என்ற கர்த்தருடைய வார்த்தைதான் என்னை சந்தித்தது.

அன்றுமுதல் இன்றுவரை கர்த்தரையே சேவிக்கிறேன். என் தேவைகளை அவ்வப்போது கர்த்தர் தந்து வருகிறார்.
கர்த்தர் தம்முடைய வார்த்தையின்படியே இன்றுவரை என்னை கைவிடாமல் நடத்தி வருகிறார்.

எனக்கு பாடல் எழுதி பாடும் வரத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தந்து இருக்கிறார்.

பல வருடங்களுக்கு முன்பாக "இயேசுவின் மகிமை"யில் "ஏழைக்கு பெலன் இயேசு" என்ற பாடலை வெளியிட்டு இருந்தீர்கள். இப்போதும் நான் ஒரு பாடலை எழுதி இருக்கிறேன்" - என்று குறிப்பிட்டு அந்த பாடலையும் தன்னுடைய கடிதத்தில் எழுதி, அனுப்பி இருக்கிறார்.

இயேசுவால் இரட்சிக்கப்பட்ட சகோதரர் ஞானசேகரன் எழுதி உள்ள அந்த பாடலை இனி படிப்போமா?

உமக்கே ஸ்தோத்திரம்
உன்னத தேவனே!
எமக்காக பரிந்து பேசும்
இயேசு ராஜனே! - (உமக்கே...)

பாவத்தை போக்கியே
பரிசுத்தம் ஆக்கும்
பாசத்தின் எல்லையே- உமக்கு
பலகோடி ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

நீதியின் பாதையில்
நித்தமும் நடத்திடும்
ஆதி அந்தம் இல்லாத
அருட்ஜோதியே ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

கன்மலையின் தேனினால்
களிப்புறச் செய்திடும்
தன்னிகர் இல்லாத
தலைவரே ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

காண்கிற தேவனாய்
காக்கிற தேவனாய் - இன்ப
கானானுக்கு வழிகாட்டும்
கர்த்தரே ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

அன்பானவர்களே!

உங்கள் ஜெப வேளையில் சகோதரர் எழுதிய இந்த பாடலை பாடி-
இயேசுவை துதியுங்கள்!
இயேசுவுக்குள் மகிழுங்கள்!
இயேசுவுக்கு மகிமையை செலுத்துங்கள்!

குடும்பத்தில் மனைவியின் பங்கு!

குடும்பத்தில் மனைவியின் பங்கு!

வேதத்தின் வெளிச்சத்திலே நம்முடைய வாழ்கையின் பாதையை சீர்தூக்கிப் பார்போம். 'உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது' என்று தாவீது சங்கீதத்தில் கூறுவதை நாம் வாசித்திருப்போம். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் போதகத்தை கேட்பதோடு நின்று விடுகிறோம். அல்லது வாசித்த வேத பகுதியை நம்முடைய வாழ்கையில் நடைமுறை படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க தவறி விடுகிறோம்.

இன்று குடும்பங்களில் மனைவியின் பங்கு குறித்து வேதத்தில் தேவன் என்ன கூறியுள்ளார் என்று பார்போம். பின்னர் அவ்வசனங்களுக்கு நம்முடைய பதில் என்னவென்றும் சிந்திப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கும். தேவன் நமக்கு உதவி செய்வாராக.

தனிப்பட்ட வாழ்க்கை

1. I தீமோத்தேயு 2:10 - தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் , தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிகொள்ளுகிற ஸ்திரிகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

• என்னுடைய உடை தேவ பக்தியுள்ள பெண்ணாக என்னை உலகிற்கு காட்டுகிறதா?

• என்னுடைய வெளிப்புற தோற்றம் அடக்கமாக, ஒழுக்கமாக மற்றவர்கள் மதிக்கத்தகும் வகையில் உள்ளதா?

2. I பேதுரு 3:3,4 - புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது ;

• என்னை காண்கிறவர்கள் உள்ளான அலங்காரத்தை காண்கிறார்களா ? புறம்பான ஆடம்பரத்தை காண்கிறார்களா ? ஆவியின் கனிகளினால் நிறைந்த நன்றியுள்ள இருதயம் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது .

• ஒரு நாளில் நாம் எவ்வளவு நேரம் ஆவிக்குரிய காரியங்களிலும், வெளிப்புற அழகிற்கும் செலவு செய்கிறோம் ?

3. I தீமோத்தேயு 2:11 -ஸ்திரியானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளகடவள்

பவுல் தன்னுடைய உடன் ஊழியனான தீமோத்தேயுவிற்கு, தேவனுடைய வீட்டில் விசுவாசிகள் நடக்க வேண்டிய வகையை குறித்து முதலாம் கடிதத்தை எழுதுகிறார். (I தீமோத்தேயு 3:15) எபேசு பட்டணத்தில் இருந்த சபை, பலவிதமான வேற்று உபதேசங்களை பின்பற்றி வந்தது. அங்கே ஊழியம் செய்ய அனுப்பிவிடப்பட்ட தீமோத்தேயுவிற்கு பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார். (1தீமோத்தேயு 3,4 ) இந்த எபேசு சபையின் ஸ்திரிகளில் சிலர், பொய்யான உபதேசங்களுக்கு செவிசாய்த்து, வழிவிலகி சென்றனர். (2 தீமோத்தேயு 3:6,7 ; 4:1-3) அமைதலுள்ள ஆவியோடு மாயமற்ற உபதேசத்திற்கு செவிகொடுக்காமல், போதனை செய்கிறவர்களோடு தர்க்கித்தனர். எனவே பவுல், ஸ்திரிகள் நற்போதனைகளை சாந்தமாய் கேட்டு , இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதன்படி அமைதலான ஜீவியம் தங்கள் குடும்பங்களில் காணப்பட கற்றுக்கொள்ளகடவர்கள் எனக் கூறுகிறார்.

• இன்று நாம் சபையின் செய்திகளை அமைதலோடு கற்றுகொள்கிறோமா? மற்றவர்களுக்கு உபதேசிக்கிரவர்களாய் காணப்படுகிறோமா?

• அல்லது,சபையின் நடைமுறைகளை பிறரிடம் விமர்சிக்கிறோமா?

• நம்முடைய ஜீவிதம் அமைதலாய் உள்ளதா?

4. I தீமோத்தேயு 6:7, 8 - போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை , இதிலிருந்து ஒன்றும் கொண்டுபோவதுமில்லை

• இன்று என் வாழ்க்கையின் எந்த இடத்திலே 'போதும்' என்று இருக்க வேண்டும்?

• அளவுக்கு அதிகமாக, அல்லது வசனத்திற்கு புறம்பாக எதை நான் விரும்புகிறேன்?

குடும்ப வாழ்க்கை

1. எபேசியர் 5:23, 24 - கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுப் போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்;...ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்த காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

• குடும்பத்தின் தலைவன் கணவர். அது தேவனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட கடமை. என்னுடைய கணவரை குடும்பத்தின் தலைவராக காண்கிறேனா? அவர் என்னை வழி நடத்த அனுமதிக்கிறேனா?

• சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவது போல நான் என் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா?

• என்னுடைய எண்ணங்களிலும், செய்கையிலும் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா?

2.எபேசியர்5:33"... மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்"

• நான் என் கணவரை மதிக்கிறேன் , அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் என்பதை அவர் உணர்ந்துள்ளாரா?

• என்னுடைய வார்த்தையினாலும், நடக்கையினாலும், ஆலோசனைகளினாலும் மற்ற பெண்கள் தங்கள் கணவரை மரியாதையோடு காண மாதிரியாய் உள்ளேனா?

3. I தீமோத்தேயு 2:15-"அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

• பிள்ளைகளை பெற்று, தேவ பக்தியுள்ளவர்களாய் வளர்ப்பதே தேவன் எனக்கு கொடுத்த பெரிய பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டது உண்டா?

• என்னுடைய நடக்கையிலும், பேச்சிலும், செயலிலும் பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாக இருக்கின்றேனா?

4.II தீமோத்தேயு 3:15-"கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக் கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்கு தெரியும்"

• என்னுடைய பிள்ளைகளுக்காக தினமும் ஜெபிக்கின்றேனா?

• அவர்களுடைய இருதயத்தில் தேவ வார்த்தையை விதைக்க உழைக்கின்றேனா?

• சுய வேலைகளை பாராமல், பிள்ளைகளை சபைக்கு அழைத்து வந்து, தேவ வார்த்தைகளை கேட்கச் செய்கிறேனா?

• சபையின் விசுவாசிகளோடு பிள்ளைகள் ஐக்கியமாக உள்ளார்களா?

• தேவனையும் அவருடைய சத்தியத்தையும் கேட்டு புரிந்துகொள்கிறர்களா?

வீடு

1. நீதிமொழிகள் 14:1 -" புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரியோ தன் கைகளினாலே அதை இடித்துப்போடுகிறாள்"

• இந்த இரண்டு ஸ்திரிகளில் யாருடைய குணம் என்னிடம் உள்ளது. என்னுடைய நோக்கமும் செயலும் எதை நோக்கி செல்கிறது?

2.நீதிமொழிகள் 31:27 -"அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்"

• என்னுடைய வீட்டின் காரியம் கிரமமாக உள்ளதா?

• நேர்த்தியான , தூய்மையான வீடாக உள்ளதா?

• கர்த்தர் விரும்பாத பொருட்கள் வீட்டிலே உண்டா ?

• என்னுடைய வீட்டில் நான் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியங்கள் என்னென்ன?

3. I தீமோத்தேயு 5:14-"...விவாகம் பண்ணவும், பிள்ளைகளை பெறவும், வீட்டை நடத்தவும் ..."

• வீட்டின் காரியத்தை குறித்து தேவன் கொடுத்த திட்டம் இதுவே - இதை குறித்து என்னுடைய எண்ணம் என்ன? வீட்டுவேலைகளை நான் பொறுப்புடன் செய்கிறேனா?

• தேவன் விரும்பும் வண்ணம் வீட்டை நிர்வாகிக்க விருப்பம் உண்டா?

சமுதாயம்

I தீமோத்தேயு 5:10-"பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரப்படுகிறவர்களுக்கு உதவி செய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து ,இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால் ..."

• நம்முடைய வீடு ஊழியங்களுக்கு திறந்து கொடுக்கப்படுகிறதா?

• நம்மை சுற்றி உள்ளவர்கள் தேவனை அறிய வாய்ப்புள்ளதா?

• சபையின் ஊழியங்களில் சகோதரிகளோடும், பிள்ளைகளோடும் பங்கு கொள்கிறேனா?

• மற்ற விசுவாசிகளின் தேவைகளை அறிந்து வாழ்கின்றேனா? அவர்களுக்கு என்னால் ஆறுதல் உண்டா?

மேன்மையான நோக்கம்

1.தீத்து 2:4, 5-"தேவவசனம் தூசிக்கப்படாதப்படிக்கு பாலிய ஸ்திரிகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும் , வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி ,நற்காரியங்களை போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரிகளுக்கு புத்திசொல்லு. "

• மேற்கூறிய வசனத்தின் வரிசையின் படி நான் விருப்பம் கொள்கிறேனா? அல்லது, வேறு ஒரு ஒழுங்கு முறையில் வாழ்க்கையின் திட்டங்களை தீட்டுகிறேனா?

• என்னுடைய குடும்பத்தை நேசித்து அவர்களது தேவைகளை சந்திக்க போதுமான அளவு முயற்சி செய்கிறேனா?

• என்னிலே சுயநலமற்ற , தியாகமான, சேவிக்கிற அன்பின் மாதிரியை என் கணவரும், பிள்ளைகளும் காண்பார்களா?

• நான் ஆவியிலே எளிமை, அன்பு, சுய அடக்கம் கொண்டவளாக உள்ளேனா?

• என்னுடைய வாழ்கை வேதம் சித்தரிக்கும் குணசாலியான ஸ்திரிபோல உள்ளதா?

மேற்கண்ட வசனங்கள் பெண்களை குறித்ததான தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறது. அதோடு தொடர்புடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்திருப்பீர்கள். நாம், எங்கு குறைவு பட்டு காணப்படுகிறோமோ அங்கு தேவ ஆவியானவர் உதவிக் கொண்டு சரி செய்து கொள்வோம். பின் ஒரு நாளில் நம்முடைய ஆண்டவரின் சந்நிதானத்தில் மாசற்ற பிள்ளைகளாய் நிற்க வழி செய்வோம்.

- பெண்கள் கலந்தாய்வு, டேரா பிரதரன் சபை ,துபாய்.
நன்றி: http://tamilbrethren.com

நீங்கள் கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்

நீங்கள் கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்

எனக்கு அருமையான சகோதரிகளே,

உங்களோடு தொடர்பு கொள்ள செய்த தேவாதி தேவனுக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம்.

நாம் கர்த்தரோடிருக்க வேண்டும்.

நாம் கர்த்தரோடிருக்க வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்து வேதம் வாசித்து ஜெபிக்க வேண்டும்.

இயேசப்பா இதை தான் விரும்புகிறார்.

என் பிள்ளைகள் என்னை விரும்புகிறார்களா? என்னோடு பேசுவார்களா? என்னோடு வாழ்வார்களா? என்று தான் நம்மிடம் எதிர்பார்கிறார்.

நாம் அவருடைய வசனத்தை குறித்து தியானிக்க வேண்டும். நாம் அவ்வாறு தியானிக்கும்போது நமது மனம் தெளிவடையும்.

மன கலக்கம், மன பாரம் எல்லாம் நம்மைவிட்டு அகன்று போகும். அவர் நம்முடைய மனதை தெளிவுபடுத்துவார். அன்றைக்குரிய காரியத்தை குறித்து நம்மிடம் பேசுவார்.

நாம் மட்டும் அல்ல-

நம் வீட்டில் உள்ளவர்களையும், நமக்கு அருமையானவர்கள் அனைவரையும் இதை போல் தியானிக்க சொல்வோம்.

நாம் கர்த்தரோடு நெருங்கி வாழும்போது அவர் நம்மோடு கூட உறவாடுவார்.

நம் மீது மிகவும் அன்புள்ளவராய் நம்மை அதிகம் அதிகமாய் நேசிக்கிறவராய் இருக்கிறார்.

எல்லா பிரச்சனைகளுக்கும், சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் நம்மை விலக்கிகாப்பார். தாய் தன் பிள்ளையை தோள் மீது சுமந்து காப்பது போல, அவர் நம்மை நம்முடைய எல்லா தீங்குகளுக்கும் விலக்கி அவருடைய தோளில் சுமந்து காக்கிறார்.

நாம் எந்த வேலை செய்தாலும் இதயத்தில் அவரை துதித்துகொண்டே, ஸ்தோத்தரித்துகொண்டே எல்லா பணிகளையும் செய்ய வேண்டும்.

அப்பொழுது அவர் நம்ம விட்டு விலகாமல் நம்மோடு கூட எப்பொழுதும் இருப்பார்.

இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ள, 'நாம் அவரோடு இருப்போம் அவர் நம்மோடு இருப்பார்'.
II நாளாகமம் 15 : 2

ஆமென்.

23-ம் சங்கீதம் - ஒரு தொகுப்பு

23-ம் சங்கீதம் - ஒரு தொகுப்பு

நம்மில் எத்தனை பேர் இந்த சங்கீதத்தின் அர்த்தத்தை அறிந்துள்ளோம்? இந்த சங்கீதத்தின் வாக்குகள் எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் ? நம்மைக் குறித்து எத்தனை அக்கறை , முன்கருதல் அவரிடம் உண்டு என்பதை புரிந்துக்கொள்வோம்.

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் - உறவு

நான் தாழ்ச்சியடைவதில்லை - தன்னிறைவு

அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து -அக்கறை

அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னை கொண்டுபோய் விடுகிறார் - தேவன் என்னோடு இருக்கிறார்

தம்முடைய நாமத்தினிமித்தம் - அவருடைய திட்டம்/நோக்கம்

நான் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் - சோதனை

பொல்லாப்புக்கு பயப்படேன் - விசுவாசம்

தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் - நம்பிக்கை

உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றும் -வழித்துணை / ஆதரவு

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி - விருப்பம்

என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறீர் - பரிசுத்தம் செய்தல்

என் பாத்திரம் நிரம்பி வழிகிறது - நிறைவு

என் ஜீவனுள்ள நாள் எல்லாம் நன்மையையும் கிருபையும் என்னைத் தொடரும் - வாக்குத்தத்தம்

நான் கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் - ஆசை

நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் - நித்தியம்

தேவன் முதல் நான்கு வசனங்களில் அவர் ஒரு உண்மையான மேய்ப்பன் என்று வெளிப்படுத்துகிறார். அடுத்த இரண்டு வசனங்களில் கிருபையுள்ளவர் என்பதை தெளிவுபடுத்துகிறார். நாம் தேவனை மேய்ப்பனாய்க் காணும்போது மூன்று காரியங்களை யோசிக்கலாம்.

1. அவர் நம்முடைய தேவையை சந்திக்கிறார். (1-3)

2. அவர் நம்மை வழிநடத்துகிறார். (3 பின்பகுதி)

3. அவர் நம்மை பாதுகாக்கிறார் (4)

இப்பொழுது ஒவ்வொரு வசனமாக கண்டு இந்த பெரிய மேய்ப்பனைப் பற்றி அறிந்துகொள்வோம்

1.கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் . நான் தாழ்ச்சியடைவதில்லை.

தேவன் நமக்குரிய மேய்ப்பராயிருக்கிறார். தாவீது கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்று கூறுகிறார்.இந்த அண்டசராசரங்களையும் படைத்த கர்த்தர் தன்னுடைய மேய்ப்பர். அவர் என்னுடைய வாழ்க்கையை அவர் ஆளுகைக்குள் வைத்துள்ளார் என்று கூறுவது போல் உள்ளது.இந்த காரியத்தை நீங்கள் அறிந்துள்ளீர்களா? தாவீதைப் போலக் கர்த்தரை உங்களுடைய மேய்ப்பராய் கொண்டு உள்ளீர்களா?

அவர் நல்ல மேய்ப்பனான யேகோவா தேவன் , தன்னையே நமக்காக கொடுத்துள்ளார். ஆகவே நமக்கு எதிலும் குறைவில்லை. நமக்காக தன்னையே கொடுத்த தேவனை நாம் எவ்வாறு விசுவாசிக்காமல் இருக்க முடியும்?

தேவன் தன் மந்தையை காத்து அதை பாதுகாத்து, வழிகாட்டி, கருத்தோடு விசாரித்து, நமிபிக்கைகுரியவராய் காணப்பட்டார். அதுபோல, வீட்டில் மனைவியாக, தாயாக இருக்கும் பெண்கள் குடும்பமான மந்தையை கருத்தோடு விசாரித்து, பாதுகாத்து, வழிகாட்டி, நம்பிக்குரியவர்களாக நடந்துக் கொள்ளவேண்டும். விசேஷமாக, பிள்ளைகளை சத்தியத்தின் பாதையில் வழிநடத்தி,வேதவசனங்களை கற்றுத்தந்து , ஆவிக்குரிய உண்மைகளையும் சொல்லிகொடுக்கவேண்டும்.

பெண்களாகிய நம்மோடு தேவன் இருக்கும் போது நாம் தன்னிறைவு உள்ளவர்களாக இருக்கின்றோம். நாம் எதைப்பற்றியும் கவலைக் கொள்ள தேவையில்லை.I பேதுரு 5:7 ," அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளை எல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்.

2.அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னை கொண்டுபோய் விடுகிறார்.

நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார் என்று தாவீது கூறுகிறார்.இந்த மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக வெளியில் சென்று நல்ல மேய்ச்சலை தேடி, மிகவும் நல்ல இடத்தை கொடுத்து , அந்த ஆடுகளின் தேவையை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறான். நம்மில் சிலருக்கு தற்போது உள்ள வேலை, வருமானம் உள்ளிட்ட காரியங்களில் திருப்தி இல்லை. இதை காட்டிலும் சிறந்த வேலை, வீடு, குடும்பம், உடல்நலம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பது உண்டு. ஆனால், கர்த்தர் நம் மேய்ப்பராய் இருக்கும் போது அவர் நமக்கு சிறந்த மேய்ச்சலை காட்டுகிறவராய் இருக்கிறார். அவருடைய திட்டத்தின் படியும் தீர்மானங்களின் படியும் மிகவும் சிறப்பான காரியங்களைத் தருகிற உண்மையுள்ள மேயப்பனாய் இருக்கிறார். நீங்கள் அவரை உங்கள் வாழ்க்கையின் காரியங்களுக்காக விசுவாசிக்கிறீர்களா? பவுல் ரோமர் 8:32 ல் இவ்வாறு கூறுகிறார், 'தம்முடைய சொந்த குமாரரென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்தெப்படி?'

கர்த்தர் எப்பொழுதும் நம்முடனே இருந்து வழிநடத்தி காக்கிரவராய் இருக்கிறார். அவரிடம் நாம் ஒப்புவித்து வாழும் போது நம்மை மகிழ்ச்சி, நிறைவு, ஆறுதல் , தேவையான வசதி தந்து நடத்துவார். நாமும்,நம்முடைய குடும்பமும் அவரையே சார்ந்திருக்க வேண்டும். ஒரு நாலும் அவரை விட்டு விலகிச்செல்ல வேண்டாம்.

3.அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தின் நிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

கர்த்தருக்கு நாம் கீழ்படிந்து நடக்கும் போது நம்முடைய ஆத்துமாவை தேற்றி , ஆறுதல் படுத்தி, புல்லுள்ள இடங்களில் , அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நம்மை கொண்டுபோய் விடுகிறார். கர்த்தர் அவருடைய திட்டத்தின்படி மாத்திரம் நம்மை வழிநடத்துகிறார்.அதுவே அவருடைய நாமத்திற்கு மகிமையையும், கனத்தையும் கொண்டு வரும் !

பெண்களாகிய நாம் நம்முடைய வழிகளை அவரிடம் ஒப்புவித்து , அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் போது, நம்முடைய வாழ்க்கைப் பாதை கர்த்தரால் செவ்வையாக்கபட்டு , ஏற்ற நேரத்தில் சிறந்த காரியங்கள் நடைபெறும். நாம் செய்கிற எல்லா காரியமும் வெற்றியுள்ளதாகக் காணப்படும்.மத்தேயு 6:33 சொல்கிறது, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் . அப்பொழுது இவைகள் எல்லாம் கூட கொடுக்கப்படும்." நாம் நம்முடைய குடும்பத்தாரை தேவனை முதலாவது தேடுகிறவர்களாக இருக்கும்படி உற்சாகப்படுத்த வேண்டும். தேவன் தன்னை உண்மையாய் தேடுகிறவர்களைக் கைவிட்டு , அவருடைய நாமத்திருக்கு மகிமை இல்லாமல் செய்வாரோ? ஒரு போதும் அப்படிச் செய்யமாட்டார். உண்மையாய் அவரை தேடி, வாழ்கையின் காரியங்களில்அவருடைய நாமத்திற்கு முதலிடம் தருகிறவர்களை, நீதியின் பாதையில் நித்தம் வழிநடத்தி, பரிசுத்தப்படுத்தி,உலகத்தாருக்கும், உங்களுக்கும் அவர் உண்மையுள்ள தேவன் என்று வெளிப்படுத்துவார்.

4.நான் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்.உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றும்.

கர்த்தருடைய பிரசன்னம் நம்மை சுற்றி இருக்கும்போது நாம் எதைக் குறித்தும் கவலைக் கொள்ளத் தேவை இல்லை. நம்முடைய விசுவாசத்தை சோதிக்கும் பிரச்சனைகள், குழப்பங்கள் வரும். ஆனாலும் , நாம் கர்த்தரிடத்தில் உறுதியாய் இருக்க வேண்டும். " ..., அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28" நம்மை பயப்படச் செய்கிற ஆபத்தான சூழ்நிலைகள் வரும் போது, அந்த காரியங்களை நினைத்து நாம் அஞ்சத் தேவையில்லை. நம்முடைய மேய்ப்பர் கையில் கோலும், தடியும் உண்டு. அவர் நம்மை எல்லா இக்கட்டுகளுக்கும் விலக்கி காக்க வல்லவராய் இருக்கிறார்.

பெண்கள் பெலவீனம் உள்ளவர்கள், என்று I பேதுரு 3:7 கூறுகிறது.ஆகவே, வாழ்கையின் போராட்டங்களில் நாம் சிக்கித்தவிக்கும் போது, கர்த்தருடைய ஆதரவில் , வழிகாட்டுதலில் நடந்து போரட்டங்களில் வெற்றி பெறவேண்டும்.ஆம், நாம் அவரையே பின்பற்ற வேண்டும். அவருடைய கோலும், தடியும் நம்மை தேற்றும்,கண்டிக்கும்.

5.என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறீர்.என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

இங்கே தாவீது, என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்று கூறும்போது, அதிலுள்ள அந்த பானத்தின் தரம் மிகவும் சிறந்ததாக இருக்கலாம் அல்லது மிகுதியான பானம் அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்.எப்படியாயினும், தாவீது அளவில்லா தேவக் கிருபையை ருசித்தவராகக் காணப்படுகிறார். தாவீதை தேவன் அந்த சங்கீதம் பாடிய நாள் வரை ஆதரித்ததை நினைத்து கூறுகிறார். அதுபோலவே,நமக்கும் தேவன் சோதனைகளிலும், எதிரிகளின் மத்தியிலும் நம்மை ஆதரித்து வழிநடத்த வல்லவராய் இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டு காலங்களில் எண்ணையால் அபிஷேகம் செய்வது வழக்கம். நம்மை தேவன் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகித்து இருக்கிறார்.அதன்மூலம் நம்முடைய அன்பின் பிதா அளவில்லா அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பைத் தருகிறார்.

6.என் ஜீவனுள்ள நாள் எல்லாம் நன்மையையும் கிருபையும் என்னைத் தொடரும். நான் கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

இவ்விதமான கிருபையில் தாவீது மிகவும் தைரியமாய் இருந்தார்.அந்த கிருபை தன் வாழ்நாள் முழுவதும் அவரை தேவனுடைய ஐக்கியத்தில் நிலைக்கும்படிச் செய்தது .தேவன் நமக்கு நன்மையையும், கிருபையும் வாழ்நாள் முழுவதும் உண்டு என்று வாக்குப்பண்ணி இருக்கிறார். அவருடைய மாறாத அன்பு அவரின் இரக்கம் பற்றிக் கூறுகிறது. ஆகவே, நாம் தேவனோடு நிலைத்திருக்க விருப்பம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். பெண்களாகிய நாம் அவருடைய பார்வையில் விஷேசித்தவர்கள், அவருடைய வழிகாட்டுதலில் நடந்து, அவரிலே நிலைத்து, பரம வீட்டை சென்று அடைவோம். ஆமென்.
நன்றி: http://tamilbrethren.com

அவசியமான மாற்றம்!

அவசியமான மாற்றம்!

பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிக சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர் வாழும் பறவைகள் இனம் இவைகள்தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம்.

ஆனால் அந்த எழுபது வயது வரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச் செல்ல முடியாது. அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும்.

வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும். இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள்தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்துபோவது.

இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடிங்கிப் போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வரகாத்திருக்கும். அதுபோலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புதுநகங்கள் முளைக்கத் தொடங்கும்.

புது நகங்கள் வளரத் தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடிங்கிப் போட்டுவிடும். ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர் பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்கு திரும்பி வரும்.

சில சமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.

பல சமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பல மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

பழைய நினைவுகள், பழைய பழக்கவழக்கங்கள், பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்க வேண்டியுள்ளது. பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.

ஏசாயா40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.

சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
http://tamilbrethren.com -லிருந்து..

உலக மக்களுக்காக ஒரே பலி!

உலக மக்களுக்காக ஒரே பலி!

ருசமயம் சாது சுந்தர் சிங் ஊழியத்தின் பாதையில் கால்நடையாக ஒரு ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில் ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள்.

அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அவர்களை நோக்கி சாது சுந்தர் சிங் சென்றார்.

அந்த இடத்தில் மக்கள் ஒரு காளையை கட்டி வைத்து கத்தியால் வெட்டி, அந்த காயத்தில் காய்ந்த மிளகாய் தூளை உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கொண்டு இருந்தார்கள்.

அது வலியின் மிகுதியால் அதிகமாக கத்திக்கொண்டு இருந்தது. ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்று சுந்தர் சிங் அறிந்து கொண்ட போது அவர் மிகுந்த மன வருத்தம் கொண்டார்.

அந்த இடத்தில் வாழ்ந்து வந்த மக்கள், அவர்கள் செய்த பாவங்களுக்கு பலியாக காளைகளை கட்டிவைத்து அதை வெட்டி காயத்தில் மிளகாய் தூளை வைத்து, அது தன் வழியால் எவ்வளவுக்கு அதிகமாக சத்தமிட்டு கதருகிறதோ, அவ்வளவாய் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று நினைத்துகொண்டிருந்தார்கள்.

இதை கண்ட சாது சுந்தர் சிங்கின் மனம் அவர்களது அறியாமையை நினைத்து கலங்கினது.

மனிதனின் பாவங்களுக்காக உயிர்களை பலியிடுவது தவறு என்று எடுத்துக்கூறி, தம்முடைய மக்களுக்காக தமது ஜீவனையே பலி கொடுத்த தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை குறித்து அவர்களிடம் கூறினார்.

இதே போல தான்-

பழைய ஏற்பாட்டின் காலத்தில் மனிதர்கள் தேவனுக்கு முன்பாக பாவம் செய்யும்போது, பாவநிவாரண பலியாக ஆடு, காளை, புறா போன்ற மிருக ஜீவன்களை பலி கொடுத்து அவர்கள் பாவமன்னிப்பு பெற்று கொண்டிருந்தார்கள்.

எனவேதான்-

உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும், அவர்களின் அனைத்து பாவங்களுக்கும் ஒரே பலியாக தம்முடைய ஒரே குமாரனை தேவன் ஜீவ பலியாக ஒப்புகொடுத்தார். நமக்காக இறுதிவரை தனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட இல்லாமல் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கினார்.

மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கர்த்தராகிய இயேசு நமக்காக சிலுவையில் தொங்கினதை தினமும் நினைத்து பாவம் செய்யாதபடி பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும்.

இயேசு கிறிஸ்து காட்டின நல்ல வழியிலே அவருக்கு பிரியமான பிள்ளைகளாக வாழ்வோம். இயேசுவை அறியாத பிறரையும் அவர்களது பாவ வழியில் இருந்து ஜீவனுள்ள நல்ல வழிக்கு அழைத்துவந்து நடக்க செய்வோம்.

கர்த்தராகிய இயேசு இதை தான் விரும்புகிறார். எல்லாம் வல்ல இயேசு காட்டிய நல்ல வழியிலே நடந்து இறுதியில் அவரது நித்தியா பேரின்ப பாக்கியத்தை பெற்றுக்கொள்வோம்.

கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசீர்வதித்து காப்பாராக.

ஆமென். அல்லேலுயா.

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" - நீதிமொழிகள் 28:13
- Hepsibai Ambrose
 
 
 

இந்த வாழ்வை வாழ்ந்ததற்காக நீ வருத்தப்படுவாய்!

இந்த வாழ்வை வாழ்ந்ததற்காக நீ வருத்தப்படுவாய்!

பிரசித்தி பெற்ற தேவ ஊழியர் ஜான் வெஸ்லி அவர்கள் ஒரு நாள் இரவு நடு இரவை தாண்டி குதிரையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கடுமையான குரல் ‘நிறுத்து’ என்று கூறுவதை கேட்டார். குதிரையை நிறுத்தியபோது, ஒரு திருடன், கையிலிருக்கும் பணத்தை கேட்டான். பணத்தை கொடுக்காவிட்டால் உயிரை எடுப்பதாக கத்தியை காட்டி மிரட்டினான்.

வெஸ்லி தன் கையிலிருந்த சில காசுகளை அவனிடம் கொடுத்தார். அவன் வேறு இடத்தில் ஒளித்திருப்பாரென்று அந்த குதிரையை தேடியபோது, ஒரு சில புத்தகங்களை மட்டும் கண்டு ஏமாற்றத்துடன், திரும்பி ஓட ஆரம்பித்த போது, வெஸ்லி அந்த திருடனை பார்த்து, ‘நில், உனக்கு தருவதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது’ என்று கூறினார்.

அந்த திருடன் எதையோ கொடுக்க போகிறார் என்று எண்ணி, திரும்பி அவரை நோக்கி வந்தான். வெஸ்லி கிறிஸ்துவின் அன்பு நிறைந்தவராக அவனிடம், ‘என் நண்பனே, நீ ஒரு நாள் இந்த வாழ்வை வாழ்ந்ததற்காக வருத்தபடுவாய், அப்படி வருத்தப்படும்போது, நினைத்து கொள், இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உன்னை சுத்திகரிக்கும் என்று’ என்று கூறினார்.

அந்த திருடன் அதை கேட்டுவிட்டு, திரும்ப தன் வழியே வேகமாய் கடந்து போனான், வெஸ்லி, அவன் இரட்சிக்கப்பட வேண்டுமே என்று ஜெபித்தவராக கடந்து சென்றார்.

சில வருடங்கள் கழித்து-

வெஸ்லி, சாயங்கால ஆராதனை கூட்டத்தை முடித்து, வெளிவரும்போது, அநேகர் அவரை காண வேண்டும் என்று முந்தியடித்து கொண்டு வந்தார்கள்.

அதில் ஒரு மனிதர், எபபடியாவது அவருடன் தான் பேச வேண்டும் என்று அங்கிருந்த மூப்பர்களிடம் மன்றாடினார். அப்படி பேச அவருக்கு தருணம் கிடைத்த போது, அந்த திருடன் தான்தான் என்றும், இப்போது தான் ஒரு தொழிலதிபர் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக தான் தேவனின் பிள்ளை என்றும் அவர் வெஸ்லியிடம் கூறினார்.

பின்னும் அவர் ‘ஐயா, உங்களுக்கு மிகவும் நன்றி, நீங்கள் அன்று அந்த வார்த்தைகளை சொல்லாதிருந்தால் நான் இன்னும்
திருடனாகவே இருந்திருப்பேன், நான் உங்களுக்கு மிகவும் கடமைபட்டிருக்கிறேன்’ என்று கூறி அவரது கரத்தை எடுத்து முத்தமிட்டார்.

அப்போது, வெஸ்லி, ‘இல்லை, என் நண்பனே, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம் பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரித்தபடியால், அவருக்கே நாம் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று கூறினார்.

நமக்கு தெரியாது, நாம் சொல்கிற கர்த்தருடைய வார்த்தைகள், எப்படி கிரியை செய்யும் என்று! ஆனால் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறபடியால், அது நினைப்பதை செய்து விட்டுதான் திரும்பும்.

தேவையுள்ளவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை நம்மால் இயன்ற அளவு கூறுவோம். கர்த்தர் அதை பொறுப்பெடுத்து கொள்வார்.

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலே ஆகும் என்று வேத வசனம் கூறுகிறது. ஆகவே, நம்மால் இயன்றதை நாம் செய்வோம், மற்றதை ஆவியானவர் பார்த்து கொள்வார்.

ஆனால் தேவனுடைய வார்த்தைகளை நாம் சொல்லும்போது ஞானத்தோடு சொல்ல வேண்டும்,
‘பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்’ என்று இயேசுகிறிஸ்து மத்தேயு 7: 6-ல் கூறுகிறார்.

ஆகவே சொல்ல வேண்டியவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தையை தேவ ஞானத்தோடு ஜெபித்து சொல்லுங்கள். கர்த்தர் கிரியை செய்வார். ஆமென் அல்லேலூயா!

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. - (எபிரேயர் 4:12).
- Immanuel Mathuram

தாயையும் தகப்பனையும் அழ வைக்கலாமா?தாயையும் தகப்பனையும் அழ வைக்கலாமா?

தாயையும் தகப்பனையும் அழ வைக்கலாமா?

▓ உன் தகப்பனை - அடிக்கலாமா?
▓ உன் தாயை - அழ வைக்கலாமா?
▓ உன்னை பெற்றவர்களை - அற்பமாக நினைக்கலாமா?
▓ உன்னை வளர்த்தவர்களை - ஒதுக்கி தள்ளலாமா?

"உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுத்த தேசத்திலே-
உன் நாட்கள் நீடித்து இருப்பதற்கும்-
நீ நன்றாக இருப்பதற்கும்-
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கட்டளையிட்டபடியே-
உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக"
(உபாகமம் 5:16)

தன் தகப்பனையாவது, தாயையாவது அடிக்கிறவன்..சபிக்கிறவன்..(யாத்திராகமம் 21:15,17)

இப்படிபட்டவர்களை நீ விட்டு விலகு....


 
இக்காலத்திற்கான வேதாகமத்தின் எச்சரிக்கை

எத்தனையோ முறை கீழ்வரும் வசனங்களை படித்திருப்போம் இல்லை கேட்டிருப்போம். இன்று ஏன் ஒரு வினாடி சிந்திக்க கூடாது:

மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக!

எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும்,
இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;

இப்படிபட்டவர்களை நீ விட்டு விலகு


சிந்திக்க :

இப்படிபட்டவர்களை நாம் விட்டு விலக வேண்டுமா?

இல்லை நம்மிடத்திலிருந்து இவற்றை விலக்க வேண்டுமா?


பரிசோதிக்க :

மேலே குறிப்பிட்ட காரியங்களில் எவற்றை என்னிடமிருந்து விலக்க வேண்டும்.


நன்றி:http://tamilchristians.com/

வெற்றியின் இரகசியம்!

வெற்றியின் இரகசியம்!

தாவீது கர்த்தருக்கென்று பெரிய காரியங்களைச் செய்தான். தாவீது தேவன் பேரில் கொண்டிருந்த வைராக்கியமும் அர்ப்பணிப்பும், ராஜாவாக அவன் நடத்திய அரிய செயல்பாடுகளும் வேதத்தில் விவரமாக எழுதப்பட்டுள்ளது.

அந்நாட்களில் இருந்த பெரும் பராக்கிரமசாலிகளை சவால்விட்டுப் போருக்கு அழைத்த ராட்சதனாகிய கோலியாத்தை தாவீது வீழ்த்தினான். அவன் அபிஷேகத்தில் நிறைந்திருந்ததினால் அவன் இசைக்கருவியை இசைத்தபோது , அசுத்த ஆவிகள் அலறி ஓடின. கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவனாக அவன் இருந்தான்.

இவையெல்லாம் தாவீதுக்கு எப்படி சாத்தியமாயிற்று? கர்த்தருடைய வார்த்தையில் அவன் பயிற்றுவிக்கப்படவில்லை. ஒரு ராட்சதனோடு போராடுவது எப்படி என்று யாரும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. அவன் எல்லோருக்கும் இளையவனாக அவன் குடும்பத்தில் இருந்தபடியால் அவனுடைய சகோதர்களே அவனை சரிவர மதிக்கவில்லை.ஆடு மேய்க்கும் சிறியவனாக அவன் வெளிகளில் இருந்தபோது ஒரு அற்புதம் நடந்தது.

காலை முதல் மாலை வரை அவன் செய்ததெல்லாம் புல்வெளிகளில் அலைந்து திரிந்து தன் மந்தையின் ஆடுகளை மேய்த்து வந்ததுதான். எனினும் இப்படிப்பட்ட சுவாரசியம் அற்ற மேய்ப்பனின் பணியிலேயே தேவன் அவனுக்கு பல உன்னதமான அனுபவங்களைத் தந்தார். இதை அவனைச் சுற்றிலும் இருந்த எவரும் அறிந்துகொள்ளவில்லை.

தாவீது தன் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசித்தான். எனவே தன் எல்லாத் தேவைகளுக்கும் தாவீது கர்த்தரை நோக்கிப் பார்த்தான். தாவீது கர்த்தரில் களிகூர்ந்து கொண்டிருந்தான். ஒரு முறை ஒரு சிங்கம் அவனுக்கு எதிராக வந்தது. கர்த்தர் அவனோடே இருந்து அதைக்கொன்றுபோட அவனுக்குப் பெலன் கொடுத்தார்.

பல சந்தர்ப்பங்களில் நாம் நமக்கு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் வனாந்தரத்தில் தனியே விட்டுவிடப்பட்டுள்ளோம் என்றும் குறைகூறித் திரிகின்றோம். ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தான் தேவன் நம்மை உருவாக்கி கூர்மைப்படுத்தி நம் திறமைகளை சிறப்பாக்கி அவர் பேரில் உள்ள நம் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்.

நீங்கள் கடந்துசெல்லும் துன்பம் துயரம் நிறைந்த போராட்ட வாழ்க்கை மட்டும்தான் பிறர் கண்களுக்குத் தெரியும். ஆனால் கர்த்தர் உங்கள் வாழ்வில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் எப்படி அவர் உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் யாரும் தெரிந்துகொள்வதில்லை.

தாவீது சிங்கத்தைக் கிழித்துப்போட்டபோது கை தட்டி ஆரவாரம் செய்து அவனைப் புகழ அங்கே யாரும் இருக்கவில்லை. ஆனால் பின்பு தேவன் அவனுடைய அனுபவத்தை பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேலரைக் காக்கப் பயன்படுத்தினார். தாவீது கோலியாத்தை ஒரு கூழாங்கல்லினால் வீழ்த்திய போது, அனைவரும் அதிசயித்தனர்.பல சந்தர்ப்பங்களில் தேவன் நம் வாழ்க்கையில் ஆழமான பல காரியங்களை இரகசியமாக நிறைவேற்றுகிறார்.

தனிமையில் நீங்கள் சிந்தும் கண்ணீர், தனிப்பட்ட முறையில் வனாந்திர வாழ்வில் நீங்கள் அனுபவிக்கும் அற்புதங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட விடுதலைகள் இவை அனைத்தையும் கர்த்தர் பயன்படுத்தி உங்கள் முன்நிறுத்தி நீங்கள் ஏராளமானோருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி உங்களை உயர்த்துவார்.

உங்கள் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் தேவனுடைய கட்டுபாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. இன்று வனாந்திர அனுபவத்தில் நீங்கள் இருப்பதை எண்ணி சோர்ந்துபோக வேண்டாம். கர்த்தரை விசுவாசியுங்கள். ஆண்டவரை நேசியுங்கள். தேவனில் களிகூருங்கள். உறுதியாய் இருங்கள்.

நன்றி: http://paralogapathi.blogspot.in