பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

பயோ டீசல்(Bio diesel) - தரிசு நிலம் இனி தங்க நிலம்!!!


பயோ டீசல்(Bio diesel) - தரிசு நிலம் இனி தங்க நிலம்!!!


தரிசு நில  மேம்பாட்டிற்காண மற்றும் ஒரு  நல்ல லாபாகரமான விவசாய பயிராக கருதபடுவது  காட்டாமணக்கு ( கொட்டை முத்து) ,இனி வரும் காலங்களில்  மாற்று எரிபொருளுக்கான முக்கிய மூல பொருளாக கருதபடுவதும் இதுவே ஆகும். சில வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள  விவசாயிகள் இதை பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டு, தங்கள் தரிசு நிலங்களில் விவசாய துறை அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் பயிரிட  துவங்கினர், தமிழ்நாடு விவசாய துறை கணக்கெடுப்பில் சுமார் 41  ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடபட்டது. அத்திட்டத்தை செயல்படுத்த, ஜெய்ப்பூரில் இருந்து காட்டாமணக்கு விதைகள் டன் கணக்கில் வரவழைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.விவசாயத்துறை அதிகாரிகள், "வானம் பார்த்த பூமியாக கிடக்கும் தரிசு நிலங்களில், காட்டாமணக்கு செடியை நடவு செய்தால், ஒரு ஏக்கருக்கு 3 டன் காட்டாமணக்கு கொட்டைகளை மகசூலாக பெறலாம். ஆண்டுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்,பயோ டீசல் தயாரிக்கலாம்,காட்டாமணக்கு செடியை ஆடு, மாடுகள் மேயாது,அதிக ஆண்டு காலம் மகசூல் பெறலாம்' என்ற வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் போல் அள்ளி தெளித்தனர் .தரிசு நிலம் அதிகமாக காணப்படும் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கரூர், திருவண்ணாமலை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில்,இந்த அதிகாரிகளின் பேச்சை கேட்டு  காட்டாமணக்கு பயிரிடப்பட்டது. 

ஆனால் நடப்பட்ட செடிகளுக்கு நீர் தேவை என்பது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது,வாரம் ஒருமுறையாவது சிறிதளவு தண்ணிர் பாய்ச்ச  வேண்டியதாக இருந்தது, வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை இதற்கு காரணம் விதைகளை  ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஏனோ தானோ என்று  இருந்த விவசாய அதிகாரிகள் தான்.விளைச்சல் இல்லாத நிலத்தை விளை நிலமாக மாற்றும் அருமையான திட்டம். செடிகளை மாவட்ட அளவில் சில ஏக்கர் அளவில், சோதனை முயற்சியாக பயிரிட்டு, மகசூல் எப்படி கிடைக்கிறது என்பதை, கள ஆய்வின் மூலம் கண்டிருக்க வேண்டும். மத்திய அரசு திட்டம் என்பதாலும், நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதாலும், ஏனோ தானோ என திட்டத்தை அவசர கதியில் மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் நிறைவேற்றினர்.மேலும், தரமான விதைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, தரமான செடிகளை உருவாக்காமல் தவறு நடந்திருக்கிறது. அதனால், அருமையான திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தற்போது, கோவை வேளாண்மை பல்கலையில் நல்ல தரமான காட்டாமணக்கு செடிகள் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.  

மேலும் அப்போது பயோ டீசல் ஒரு லிட்டர்  தயாரிக்க ஆகும் செலவு , டீசல் விலையை விட சற்று அதிகமாக இருந்தது,ஆனால் இப்போது நிலைமை தலை கிழாக மாறிவிட்டது,  டீசல் விலை 100 -ஐ தாண்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதால்,பயோ டீசல் என்பது விரைவில், தரிசு நிலங்களை தங்க நிலமாக மாற்றும் என்பதில் மாற்றம் இல்லை.ஏற்கனவே கார்பரடேட் கம்பெனிகள் தரிசு நிலங்களை 1000  ஏக்கர் ,2000  ஏக்கர் என வளைக்க தொடங்கிவிட்டனர். எனவே தங்கள் பணத்தை முதலீடு செய்யும் நமது மனித பட்சிகள்,வீடு , சைட் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு பதிலாக, ஒரு ஏக்கர்  ரூ 2 (அலல்து)  3  லட்சங்களுக்கு கிடைக்கும் நிலங்களில் முதலீடு செய்தால் ,நல்ல லாபம் பெறலாம்.நமது பாரம்பரிய  நிலங்களையும்  கார்பரடேட் கம்பெனிகள் கைகளில் இருந்து காப்பற்றலாம்.


For More Info : anandhaprabhu@gmail.com,91 9886650235

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக