கிருபைக்கும் தேவையான தகுதி?
நாம் பொதுவாக தாவீது ராஜா ,ஊதாரி மைந்தன்,எசேக்கியா ராஜா ,மனாசே ராஜா என்பவர்களை நோக்கும் போது ..
கிருபை பெற தன்னை தாழ்த்தி தேவனிடத்தில் வேண்டும்படியான விசுவாசமும்,தாழ்மையும்,புத்தியும்,உண்மையும் அவசியம் என எண்ணலாம்.
யாத்திராகமம் 33:19 அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்..
ரோமர்9 :15.16அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
இப்படியாக தேவன் சொன்னாலும் தேவனை அறிந்தவர்கள் சகலதியும் அறிவார்கள் என்பதாக உள்ள வசனத்தை அறிந்தால் பின்வருமாறு நாமும் கூற முடியும்..
யாத்திராகமம் 34:6 கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
I நாளாகமம் 16:34 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. என்று!!
ஆனாலும் தேவன் அனைவருக்கும் கிருபை பாராட்டினாலும், அவனவனுடைய கிரியைக்கு தக்கதாய் தமது கிருபையை காக்கிறார் அல்லது கிருபையை காத்துக்கொள்ள கிருபை செய்கிறார்..
II நாளாகமம் 6:14 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
நெகேமியா 1:5 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
சங்கீதம் 25:10 கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.
கிருபையை காத்துகொள்ளாத துன்மார்கர் பூரணகிருபை வரமான நித்திய ஜீவனை பெறாமல் போவர். பெற்ற கிருபையை போற்றி காத்துகொள்ளுபவர் அதனை பெற்றுகொள்வர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக