பக்கங்கள்

புதன், 7 நவம்பர், 2012


‎****** நான் யார் ******


ஒரு ஞானியை சந்திக்க ஒரு மனிதர் வந்து தன் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை குறித்து மிக வருத்ததோடு விளக்கிக்கொண்டிருந்தார். வந்த அந்த மனிதனின் பிரச்சனைகளை பொறுமையோடு கேட்ட ஞானி, அந்த மனிதனை பார்த்து "உன் வீடு எது என்று உனக்கு தெரியுமா" என்று கேட்டார், உடனே அந்த மனிதன் தெரியும் என்றான். 

பின்பு "உன் மனைவி மக்கள் யார் யார் என்று உனக்கு தெரியுமா" என்று கேட்டார் அதற்கும் அந்த மனிதன் தெரியும் என்றான்.

அதன் பிறகு "உன் செல்போன் நம்பர் உனக்கு தெரியுமா" என்று கேட்டார் சற்றும் தயங்காமல் அந்த மனிதன் தெரியும் என்று பதிலளித்தான்.

பின்னர் "நீ யார் என்று உனக்கு தெரியுமா" என்று கேட்டார், ஞானியின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் அந்த மனிதன் குழப்பம் அடைந்தவனாய்.... தெரியாது என்றான்.

அதற்க்கு அந்த ஞானி உன் வாழ்க்கையில் இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம், "நீ யார் என்று உனக்கு தெரியாதது தான்." அதனால் முதலில் நீ யார் என்று உன்னை நி தெரிந்து கொள் என்று வந்த அந்த மனிதனை ஞானி அனுப்பிவிட்டார்.

ஆம்! நண்பர்களே, நம்முடைய வாழ்க்கையிலும் நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சனைகளுக்கும் காரணம், நாம் யார் என்று நமக்கு தெரியாததே. நாம் வைத்திருக்கும் Car அல்லது Bike கை பற்றி நமக்கு நன்றாக தெரியும், நம்முடைய நண்பர்களை பற்றி நமக்கு நன்றாக தெரியும், நாம் வைத்திருக்கும் துணிகள் என்ன Brand,அது எந்த நாட்டில் தயார் செய்யப்பட்டது என்று நமக்கு நன்றாக தெரியும். ஆனால் நாம் யார் என்பது நமக்கு தெரியாது.

நாம் யார் என்பதையும், நம் அழைப்பு என்ன என்பதையும், நாம் இந்த உலகத்தில் பிறந்ததின் நோக்கம் என்ன என்பதையும் கண்டுப்பிடிப்போம், வாழ்க்கையில் வெற்றிகளை குவிப்போம்.

"ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." எபேசியர் 2:10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக