பக்கங்கள்

திங்கள், 5 நவம்பர், 2012

ஜெபம்- லியனார்டு ரேவன்ஹில்

ஜெபம்- லியனார்டு ரேவன்ஹில்:

ஜெபத்தைப் போல மறுரூபமாக்க வல்லது எதுவுமில்லை. “ஜெபம், ஜெபம் என்று அடித்துக்கொள்ளுகிறீர்களே, ஏன்” என்று கேட்பவர்களுக்கு எனது எளிமையான பதில், “ஏனா? இயேசு ஜெபித்தார், அதான்” என்பதே.
லூக்காவின் நற்செய்தி நூல் என்ற தலைப்பை ஜெபத்தின் நற்செய்தி நூல் என்றால் மிகையாகாது. அது இயேசுவின் ஜெபவாழ்வு. மற்ற நற்செய்தியாளர்கள் இயேசு யோர்தானிலிருந்தபோது ஆவியானவர் புறாவைப்போல் இறங்கினார் என்பர். லூக்காவோ அவர் ஜெபித்துக் கொண்டிருந்தபோது ஆவியானவர் அவர் மீது இறங்கினார் என்கிறார். பிற நற்செய்தியாளர்கள் இயேசு சிலுவையில் மரித்தார் என்பர்.
லூக்காவோ மரண மூச்சிலும் இயேசு தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார் என்கிறார். மற்ற நற்செய்தியாளர்கள் இயேசு மலைமீது ஏறிச் சென்று மறுரூபமானார் என்பர். லூக்காவோ அவர் ஜெபிப்பதற்காக மலைக்குச் சென்றார்; அப்படி அவர் ஜெபித்துக் கொண்டிருந்தபோது மறுரூபமானார் என்கிறார். ஜெபத்தைப் போல மறுரூபமாக்கும் வல்லமை வேறெதுவும் கிடையாது.
வேதவாக்கியம், சீடர்கள் படுக்கைக்குச் சென்றனர், இயேசுவோ தமது வழக்கத்தின்படியே ஜெபிக்கச் சென்றார் என்கிறது. ஜெபிப்பது அவரது பழக்கம். இயேசு தேவக்குமாரனாயிருந்தார்—நிச்சயமாக தமது ஊழியத்ற்குத் தேவையான அபிஷேகத்தைப் பெற்றிருந்தார். அப்படிப்பட்ட இயேசுவே அவ்வளவு ஜெபிக்க நேரம் எடுத்திருப்பாரானால் நீங்களும் நானும் எந்த மூலை? ஒவ்வொரு நெருக்கத்திலும் ஜெபிப்பது இயேசுவின் தேவையாயிருந்ததானால் நமக்கு ஒவ்வொரு நெருக்கத்திலும் அது அத்தியாவசியமில்லையா?
தவிப்பான ஜெபம்
தவிப்பான ஜெபம் தவிப்பான ஜெபம் தவிப்பான ஜெபம் தவிப்பான ஜெபம் தேவன் தனிமையில்தான் தமது சிறப்பானவர்களை உருவாக்குகிறார். ஜெபிப்பதின் இரகசியம் என்ன தெரியுமா? இரகசியத்தில் ஜெபிப்பதுதான்.  “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் ...” (மத் 6:6). அந்தரங்கத்தில், யாரும் இல்லாதபோது நீங்கள் உங்கள் வரங்களை வெளிப்படுத்த முடியாதே. மற்றவர்களை அசத்தலாம்;  ஆண்டவரை அசத்த முடியுமா?
எல்கானாவும் அவரது மனைவி அன்னாளும்   ஆண்டவரை ஆராதிக்கவும் பலி செலுத்தவும்
ஆண்டுதோறும் சீலோவிற்கு மேற்கொண்ட பயணத்தைக் குறித்து 1 சாமுவேல்1:1-15இல் வாசிக்கிறோம். தனது கணவனுக்கு ஒரு பிள்ளையைக் கொடுக்க முடியவில்லையே என்று அன்னாள் நொந்து போயிருந்தாள். வேதம் அவள் ஜெபத்திற்காய் செலவிட்ட நேரத்தை வர்ணனை செய்கிறது. அவள் மனங்கசந்துஅழுது புலம்பி ஆண்டவரிடம் மன்றாடினாள் என்றும், துயரத்தோடு மனம் நொந்து உள்ளத்தைக் கொட்டினாள் என்றும் வேதம் கூறுகிறது. இது துன்பச் சங்கிலி எனலாம். — துக்கம், வேதனை யாவும் அவளை அழுத்தின. ஆனால் இந்தச் சூழ்நிலையின் திறவுகோல் என்னவென்றால் — அவள் ஒரு ஜெபிக்கும் பெண்மணி. இருபதாம் வசனம் அவள் பலனைப் பெற்றுக் கொண்டாள் என்கிறது: “உரிய காலத்தில் அன்னாள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ‘நான் அவனை
ஆண்டவரிடமிருந்து கேட்டேன்’ என்று சொல்லி அவள்அவனுக்கு ‘சாமுவேல்’ என்று பெயரிட்டாள்.” 
நான் அடிக்கடி சொல்லும் ஒன்று — மக்கள் கேட்க வெறுக்கும் ஒன்று தேவன் — ஜெபத்திற்குப் பதிலளிப் பதில்லை என்பதுதான். அவர் தவிப்பான ஜெபத்திற்குதான் பதிலளிக்கிறார். உங்கள் சுய சக்தியை எவ்வளவுநம்பியிருக்கிறீர்களென்றும், நாதியற்ற நீசன்தான் உம் சிலுவை தஞ்சமே என்று நீங்கள் பாடும் பொழுது அதைஉண்மையாகவே இருதயத்தில் எவ்வளவு நம்புகிறீர்கள் என்றும் உங்கள் ஜெப வாழ்க்கையே காட்டும். எவ்வளவு சுயநம்பிக்கையுடையவர்களாயிருக் கிறீர்களோ அவ்வளவு குறைவாக ஜெபிப்பீர்கள். எவ்வளவு சுயநம்பிக்கையற்றவர்களாயிருக்கிறீர்களோ அவ்வளவு
அதிகமாக ஜெபிப்பீர்கள்.
எழுந்து ஜெபியுங்கள்

வீட்டன் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர். வி. ரேமாண்ட் எட்மனுடன் ஒரு கருத்தரங்கில் இருந்தேன். அவர் மிஷனரியாக ஈக்வடாரில் இருந்தபோது நடந்ததொரு அனுபவத்தை எங்களுக்கு எடுத்துரைத்தார். அவர் நோய்வாய்ப்பட்டு மரிக்கும் தருவாயில் மரணம் அவரைக்கவ்விக்கொள்ளும் நேரம் வந்தது என்று அவரது கல்லறையையும் தோண்டி விட்டார்களாம். வியர்வை முத்துக்கள்அவரது நெற்றியிலும் மரண ஓசை அவரது தொண்டையிலும் நிறைந்தனவாம். தீடீரென்று அவர் எழுந்து படுக்கையில் நேரே உட்கார்ந்து தன் மனைவியிடம், “என் ஆடைகளைக் கொண்டு வா” என்றாராம். யாருக்கும் நடந்ததின்னதென்று தெரியாது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பாஸ்டனில் இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தாராம். பிறகு சித்தான ஒரு பாட்டியம்மா நெளிந்து பழதாய்ப் போன ஒரு சிறிய புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு அவரிடம் வந்து,“என்று  நீங்கள் மரிக்கும் தருவாயில் இருந்தீர்கள்? அப்போது ஈக்வடாரில் என்ன நேரம்?  அது பாஸ்டனில் என்ன நேரமாயிருக்கும்?” என்று வினவினார்களாம். அவர் பதிலளித்தபோது அவர்களது சுருங்கிய முகம் ஒளி பெற்றதாம். அப்புத்தகத்தைச் சுட்டிக் காட்டி, “இதோ பார்த்தீர்களா? விடியல் 2 மணிக்கு கடவுள் என்னிடம் எழுந்து ஜெபிக்கச் சொன்னார். ‘பிசாசு ஈக்வடாரில் ரேமாண்ட் எட்மனைக் கொல்லப் பார்க்கிறான்’” என்றாராம். அவர்கள் எழுந்து ஜெபித்திருக்கிறார்கள், ஆண்டவர் பதிலளித்தார்.
ஏன் நமக்கு எழுப்புதல் இல்லை
அயர்லாந்தில் நான்கு வாலிபர் ஒவ்வொரு இரவும் கூடி எழுப்புதலுக்காக ஜெபித்த இடத்தை மக்கள் மரியாதையோடு சுட்டிக் காட்டுவர். 18 அல்லது 19 வயதேயான 3 அல்லது 4 வாலிபர் ஒவ்வொரு இரவும் கூடி ஜெபித்த இடமொன்று வேல்ஸ் நாட்டின் குன்றுகளில் உண்டு. அவர்கள் தேவனை விடுவதாயில்லை. தேவனிடமிருந்து, ‘முடியாது’ என்ற பதிலை ஏற்க மறுத்தனர். “எங்கள் சபைக்கு எழுப்புதல் வேண்டும்; ஆனால் அதற்காக நாங்கள் வசதிகளை விட்டுக் கொடுக்க முடியாது” என்பீர்களானால் எழுப்புதலை மறந்து விடுங்கள். எழுப்புதலுக்கு கிரயம் செலுத்த வேண்டும்.
நமக்கு எழுப்புதல் இல்லாததற்கு ஒரு காரணம் நாம் எழுப்புதலின்றியே திருப்தியாக வாழக் கற்றுக் கொண்டோம். நாம் தேவனைத் தேடவில்லை; ஆசீர்வாதங்களையேத் தேடுகிறோம். எண்ணாகமம் 11இல் மோசே தேவனிடம், “என்னால் சுமக்க முடியாத பாரத்தை தூக்கச் சொல்லுகிறீர். ஏதாவது செய்யும், இல்லையேல் என்னைக் கொன்றுபோடும்” என்கிறார்.

“ஆண்டவரே, எழுப்புதலை அனுப்பும், இல்லையேல் என்னைக் கொன்றுபோடும்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு உங்கள் தேசத்தை நேசிக்கிறீர்களா? ஆதியாகமம் 30ஆம் அத்தியாயத்தில் ராகேல் “எனக்குப்  பிள்ளை தாரும், இன்றேல் நான் சாகிறேன்” என்று யாக்கோபுக்கு முன்பாக விழுந்து புரளுகிறாள். அப்படியாக தேவனுக்கு முன்பாக விழுந்து புரண்டு ஆன்மீகப் பிறப்பில் ஆவிக்குரிய பிள்ளைகளை நமது தேசத்தில் பெற்றெடுக்க ஆயத்தமா?
“நான் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருக்கிறேன்” என்கின்றனர். ஆவியின் நிறைவு உங்கள் ஜெபவாழ்வை புரட்சிகரமாக்கியிராவிடில் அதை நிதானித்துப் பார்ப்பீர். தேவன் விரும்பியதைத்தான் நீங்கள் பெற்றுக் கொண்டீர்களோ என்று ஐயமுறுகிறேன்
இந்தப் பெண் அன்னாளைப்போல் நாம் ஆக வேண்டும். அவள் செய்ததென்ன? அழுதாள், கதறினாள், எனக்கு ஒரு தேவையுண்டு என்றாள், உபவாசித்தாள், ஜெபித்தாள்.
தேவனால் அபிஷேகிக்கப்பட்ட இயேசு ஜெபத்தைத் தன் பழக்கமாக்கினார். புத்திக்கூர்மையும் உயரிய பின்னணியுமுடைய பவுல், தான் பலவீனனென்று ஜெபத்தையே சார்ந்திருந்தார். அரசனாகிய தாவீது தான் சிறுமையானவன் என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார் அன்னாள் ஒரு மகனுக்காக விண்ணப்பித்து ஒரு தீர்க்கதரிசியைப் பெற்றெடுத்தாள்.
கையளவு வாலிபரது ஜெபங்கள் எழுப்புதல் தீயைப் பற்றவைத்தன ஜெபத்தைக்காட்டிலும் மறுரூபமாக்கக்கூடியது
வேறொன்றுமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக