திங்கள், 31 டிசம்பர், 2012
மானியம் வழங்கப்படும் தொழில்கள்!
மானியம் வழங்கப்படும் தொழில்கள்!
எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன தெரியுமா?
1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்
சரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?
15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்
சரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?
15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.
From: http://thachankurichymail.blogspot.in
ஆயில் மில்!
ஆயில் மில்!
வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
சந்தை வாய்ப்பு!
உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.
முதலீடு!
எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.
கட்டடம்!
ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.
வேலையாட்கள்!
இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.
மூலப் பொருட்கள்!
நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம்.தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.
இயந்திரம்!
எக்ஸ்பெல்லர் (ணிஜ்ஜீமீறீறீமீக்ஷீ), வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.
தயாரிப்பு முறை!
தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள். பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.
பிளஸ்!
தேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய் என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில் தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.
மைனஸ்!
மூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும்.இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப் பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்!
சந்தை வாய்ப்பு!
உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.
முதலீடு!
எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.
கட்டடம்!
ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.
வேலையாட்கள்!
இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.
மூலப் பொருட்கள்!
நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம்.தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.
இயந்திரம்!
எக்ஸ்பெல்லர் (ணிஜ்ஜீமீறீறீமீக்ஷீ), வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.
தயாரிப்பு முறை!
தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள். பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.
பிளஸ்!
தேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய் என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில் தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.
மைனஸ்!
மூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும்.இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப் பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்!
முன்னேறுவதற்கான வழி என்ன?
முன்னேறுவதற்கான வழி என்ன?
மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்குமே, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சிலருக்கு, கடைசி மூச்சு வரை கூட, இந்த எண்ணம் இருக்கும். முன்னேறுவதற்கான வழிகளைக் கற்றுக் கொடுக்க ஏராளமான புத்தகங்கள், வகுப்புகள், தனி படிப்புகள் இருந்தாலும், எல்லாருக்குமே அவை பொருந்துமா என்பது கேள்விக்குறியே.
"பிரைடே' என்ற துபாய் பத்திரிகையில், எலிசபெத் என்ற எழுத்தாளர், 10 வழிமுறைகளை எழுதியுள்ளார். அவை:
1. உயர் பதவியை அடைய, போட்டி மனப்பான்மை தேவை. போட்டி என்பது, மற்றவர்களை "போட்டுக் கொடுத்து' முன்னுக்கு வருவது அல்ல. உங்கள் திறமையை அதிகரித்து, தொடர்ந்து அதை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில், உங்கள் திறமை இவ்வளவு தான் என்ற தீர்மானத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்படும். அது தான் உங்கள் எல்லைக் கோடு. அது என்ன என்பதை கண்டுபிடிக்கும் வரை, தொடர்ந்து உழைக்க வேண்டும்.
2. உயர் பதவியை அடைய வேண்டும் என்ற வேகத்தில், நான்கு கால் பாய்ச்சல், எட்டு கால் பாய்ச்சலில் செல்வதை விட, ஒவ்வொரு வேலையையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், அனைத்து வேலைகளிலும் நீங்கள் அத்துப்படி ஆகி விடுவீர்கள். உச்சப் பதவியில் அமரும் போது, உங்கள் கீழ் பணியாற்றும் யாரும் உங்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது.
3. ஒரு வேலையை முழுதுமாகக் கற்று முடிக்கும்போது, உங்கள் தன்னம்பிக்கை உயரும். தொடர்ந்து அதே பணியைச் செய்தபடி இருந்தால், அந்தப் பணியை வேகமாகச் செய்து முடித்து, "அடுத்து என்ன வேலை செய்யலாம்?' என்று சிந்திக்கத் துவங்கி விடுவீர்கள். இதுவே முன்னேற்றத்துக்கான அடிப்படை.
4. உங்கள் வீட்டை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவு அலுவலகத்தையும் நேசிக்க வேண்டும். உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளை நீங்கள் அறிந்து வைத்துள்ளது போல், அலுவலகத்தையும் அறிய வேண்டும். அலுவலகத்தை உங்கள் வீடாக நினைத்துக் கொண்டால், வீட்டை அழகாக நிர்வகிப்பது போல, அலுவலகத்தையும் அழகாக நிர்வகிப்பீர்கள்.
5. அனைத்தையும் அறிந்து கொண்டு, நடுநிலையுடன் செயல்பட்டு, நீண்ட நேரம் அலுவலகத்தில் அமரும் பழக்கம் உள்ளவராக இருந்தால், நீங்கள் நினைத்தபடி வேலைகள் நடக்கும்; அலுவலகக் கட்டுப்பாடுகள் கூட உங்களிடம் மண்டி இடும்.
6. நீங்கள் தற்போது பணியாற்றும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, நிறைய பொறுமை, சகிப்புத் தன்மை தேவை. இதைக் கைகொண்டால், உங்களை அனைவரும் மதிப்பர்; உங்களை நம்பி வேலைகள் தானாக வந்து சேரும்.
7. எங்கு பணி புரிந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருங்கள். அப்போது தான் உங்கள் தனித்துவம் வெளிப்படும்.
8. "இந்த வேலை போரடிக்கிறது; வேறு வேலை பார்க்கலாமா...' என்று, நிலையற்ற வகையில் சிந்திக்காதீர்கள். உங்களால் செய்ய முடிந்த பணியைத் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் திறமைக்கு மீறிய வேலையை நீங்கள் செய்யவில்லை. போரடிக்கும் வேலையை வேகமாகச் செய்து முடித்தால், அடுத்த வேலை தானாகவே உங்கள் மடியில் வந்து விழும்.
9. "இது முடிஞ்சாச்சு... அடுத்து என்ன...' என்று பரபரப்பாக, வேகமாக ஓடியபடியே இருந்தாலும், ஒரு நாள், மீண்டும் பழைய இடத்திற்கே தான் வரவேண்டி இருக்கும். இதற்கு ஏன் வாழ்க்கையை அனாவசியமாக "டென்ஷன்' படுத்திக் கொள்கிறீர்கள்?நிதானமாக, கவனத்துடன் தற்போதைய பணியைச் செய்து கொண்டே இருந்தால், நிலையான முன்னேற்றம் ஏற்படும்.
10. மற்றவர்கள், "டென்ஷனுடன்' ஓடுவதைப் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருங்கள். நீங்கள் "ரிலாக்ஸ்' ஆகி விடுவீர்கள்.
நீங்கள் உயர் பதவி வகிப்பவரா? எப்படி முன்னேறினீர்கள்? எடுங்கள் பேனாவை,
எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை?
எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை?
வடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் ஊறுகாய், கொத்தமல்லி சட்னி… என்று விதம் விதமாக கேட்கிறார்கள்.
உலர வைக்கப்பட்ட காய்கறிகள் : ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின்
மாம்பழச் சாறு : சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள்.
ஊறுகாய் மற்றும் சட்னி : ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஃபிரான்ஸ்
பதப்படுத்தப்பட்ட பழங்கள் : அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சவுதி அரேபியா.
இந்தியாவின் கைமணம் கமழும் முறுக்கு, மிட்டாய், வெல்லம், கடலைமிட்டாய்… போன்றவற்றுக்கும் வெளிநாட்டில் ஏராளமான வாய்ப்பு உள்ளன.
கடலை மிட்டாய் : இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்
வெல்லம் : போர்ச்சுக்கல், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம்
வெப்பமண்டல நாடான இந்திய கால்நடைகளின் இறைச்சியில் சுவை கூடுதலாக இருக்கிறதாம். இதனால் பல நாடுகள் வாங்கிக்
கொள்ள, போட்டி போடுகின்றன. அந்த வரிசையில் நம்மூர் ஆட்டிறைச்சிக்கு முதலிடம் உண்டு.
எருமை இறைச்சி : மலேசியா, பிலிப்பைன்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டன், வியட்நாம்
ஆட்டிறைச்சி : சவூதி அரேபியா, கத்தார், ஏமன், குவைத்
கோழியிறைச்சி : ஏமன், ஜெர்மனி, டென்மார்க், குவைத், ஜப்பான்
பால் பொருட்கள் : எகிப்து, வங்கதேசம், நேபாளம், அல்ஜீரியா, தாய்லாந்து
பதப்படுத்தப்பட்ட இறைச்சி : வியட்நாம், கானா, துருக்கி, சீனா
தேன் : அமெரிக்கா, ஜெர்மனி, சவுதி அரேபியா, இங்கிலாந்து, பெல்ஜியம்
நம் நாட்டில் விளையும் அரிசி, பருப்புக்கும் கூட வெளிநாட்டில் ஏக வரவேற்புதான். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அரிசியை அதிக அளவு இறக்கமதி செய்கிறார்கள்.
பாசுமதி அரிசி : சவுதி அரேபியா, குவைத், இங்கிலாந்து, ஏமன்
மற்ற ரக அரிசி : நைஜீரியா, வங்கதேசம், தென் அமெரிக்கா
கோதுமை : நேபாளம், வங்கதேசம், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பூடான்
பயறு வகை மற்றும் பிற தானியங்கள் : வங்கதேசம், இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, சூடான், மலேசியா, தாய்லாந்து
இந்தியாவில் இருந்து இத்தனை வகையானப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வாய்ப்புகள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள விற்பனை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளுக்கு நீங்கள் ‘அபீடா’ நிறுவனத்தை அணுகலாம்.
தொடர்புக்கு :
Mr. R. Ravindra, Reginal Incharge Agricultural and Procesed Food products, Export Development Authority, 12/1/1, Palace Cross Road, Bangalore – 20. Phone : 080-23343425 / 23368272
உலர வைக்கப்பட்ட காய்கறிகள் : ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின்
மாம்பழச் சாறு : சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள்.
ஊறுகாய் மற்றும் சட்னி : ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஃபிரான்ஸ்
பதப்படுத்தப்பட்ட பழங்கள் : அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சவுதி அரேபியா.
இந்தியாவின் கைமணம் கமழும் முறுக்கு, மிட்டாய், வெல்லம், கடலைமிட்டாய்… போன்றவற்றுக்கும் வெளிநாட்டில் ஏராளமான வாய்ப்பு உள்ளன.
கடலை மிட்டாய் : இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்
வெல்லம் : போர்ச்சுக்கல், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம்
வெப்பமண்டல நாடான இந்திய கால்நடைகளின் இறைச்சியில் சுவை கூடுதலாக இருக்கிறதாம். இதனால் பல நாடுகள் வாங்கிக்
கொள்ள, போட்டி போடுகின்றன. அந்த வரிசையில் நம்மூர் ஆட்டிறைச்சிக்கு முதலிடம் உண்டு.
எருமை இறைச்சி : மலேசியா, பிலிப்பைன்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டன், வியட்நாம்
ஆட்டிறைச்சி : சவூதி அரேபியா, கத்தார், ஏமன், குவைத்
கோழியிறைச்சி : ஏமன், ஜெர்மனி, டென்மார்க், குவைத், ஜப்பான்
பால் பொருட்கள் : எகிப்து, வங்கதேசம், நேபாளம், அல்ஜீரியா, தாய்லாந்து
பதப்படுத்தப்பட்ட இறைச்சி : வியட்நாம், கானா, துருக்கி, சீனா
தேன் : அமெரிக்கா, ஜெர்மனி, சவுதி அரேபியா, இங்கிலாந்து, பெல்ஜியம்
நம் நாட்டில் விளையும் அரிசி, பருப்புக்கும் கூட வெளிநாட்டில் ஏக வரவேற்புதான். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அரிசியை அதிக அளவு இறக்கமதி செய்கிறார்கள்.
பாசுமதி அரிசி : சவுதி அரேபியா, குவைத், இங்கிலாந்து, ஏமன்
மற்ற ரக அரிசி : நைஜீரியா, வங்கதேசம், தென் அமெரிக்கா
கோதுமை : நேபாளம், வங்கதேசம், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பூடான்
பயறு வகை மற்றும் பிற தானியங்கள் : வங்கதேசம், இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, சூடான், மலேசியா, தாய்லாந்து
இந்தியாவில் இருந்து இத்தனை வகையானப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வாய்ப்புகள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள விற்பனை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளுக்கு நீங்கள் ‘அபீடா’ நிறுவனத்தை அணுகலாம்.
தொடர்புக்கு :
Mr. R. Ravindra, Reginal Incharge Agricultural and Procesed Food products, Export Development Authority, 12/1/1, Palace Cross Road, Bangalore – 20. Phone : 080-23343425 / 23368272
செவ்வாய், 11 டிசம்பர், 2012
சிறு தொழில் சம்மந்தமாக ஆலோசனைக்கு …..
சிறு தொழில் சம்மந்தமாக ஆலோசனைக்கு …..
சிறு தொழில் சம்மந்தமாக மேலும் ஆலோசனைகள் மற்றும் முறையான பயிற்சிக்கு ITCOT Ltd. கிழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொண்டால் மேலும் பல தொழில் சம்மந்தமாக விடை கிடைக்கும்.
| The registered and administrative office is located at
50-A, Greames Rd
Murugesan Naicker Complex Chennai 600 006
Phone : 044-42936800
Fax : 2829 3512.
Land Marks
The office is located in the Murugesan Naicker Complex, which lies on the lane between the IDBI Bank and the Canara Bank Thousand Lights Branch. The office building housing ITCOT is just next to the Beardsell office building. The Murugesan Naicker Complex is situated behind the MRF building, an important landmark on Greames Rd.
Out-Station Offices
ITCOT has out-station located at Mumbai, Salem, and Erode:
|
இட்லி உப்புமா
இட்லி உப்புமா
தேவை:
இட்லி_5
சின்ன வெங்காயம்_5
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
பெருங்காயம்_ துளி
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_சிறிது
உப்பு_துளி
எண்ணெய்_1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்_5
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
பெருங்காயம்_ துளி
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_சிறிது
உப்பு_துளி
எண்ணெய்_1 டீஸ்பூன்
செய்முறை:
இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கடலைப் பருப்பு, பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.
பிறகு சின்ன வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கி இட்லி உதிரியைக் கொட்டிக் கிளறி சூடேறியதும் இறக்கவும்.
குறிப்பு:
இட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் வெங்காயத்திற்கு மட்டும் உப்பு சேர்க்கவும்.இட்லியும் ஏற்கனவே வெந்து இருப்பதால் சூடேறியவுடன் இறக்கிவிடலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)