பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

உலக மக்களுக்காக ஒரே பலி!

உலக மக்களுக்காக ஒரே பலி!

ருசமயம் சாது சுந்தர் சிங் ஊழியத்தின் பாதையில் கால்நடையாக ஒரு ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில் ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள்.

அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அவர்களை நோக்கி சாது சுந்தர் சிங் சென்றார்.

அந்த இடத்தில் மக்கள் ஒரு காளையை கட்டி வைத்து கத்தியால் வெட்டி, அந்த காயத்தில் காய்ந்த மிளகாய் தூளை உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கொண்டு இருந்தார்கள்.

அது வலியின் மிகுதியால் அதிகமாக கத்திக்கொண்டு இருந்தது. ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்று சுந்தர் சிங் அறிந்து கொண்ட போது அவர் மிகுந்த மன வருத்தம் கொண்டார்.

அந்த இடத்தில் வாழ்ந்து வந்த மக்கள், அவர்கள் செய்த பாவங்களுக்கு பலியாக காளைகளை கட்டிவைத்து அதை வெட்டி காயத்தில் மிளகாய் தூளை வைத்து, அது தன் வழியால் எவ்வளவுக்கு அதிகமாக சத்தமிட்டு கதருகிறதோ, அவ்வளவாய் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று நினைத்துகொண்டிருந்தார்கள்.

இதை கண்ட சாது சுந்தர் சிங்கின் மனம் அவர்களது அறியாமையை நினைத்து கலங்கினது.

மனிதனின் பாவங்களுக்காக உயிர்களை பலியிடுவது தவறு என்று எடுத்துக்கூறி, தம்முடைய மக்களுக்காக தமது ஜீவனையே பலி கொடுத்த தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை குறித்து அவர்களிடம் கூறினார்.

இதே போல தான்-

பழைய ஏற்பாட்டின் காலத்தில் மனிதர்கள் தேவனுக்கு முன்பாக பாவம் செய்யும்போது, பாவநிவாரண பலியாக ஆடு, காளை, புறா போன்ற மிருக ஜீவன்களை பலி கொடுத்து அவர்கள் பாவமன்னிப்பு பெற்று கொண்டிருந்தார்கள்.

எனவேதான்-

உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும், அவர்களின் அனைத்து பாவங்களுக்கும் ஒரே பலியாக தம்முடைய ஒரே குமாரனை தேவன் ஜீவ பலியாக ஒப்புகொடுத்தார். நமக்காக இறுதிவரை தனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட இல்லாமல் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கினார்.

மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கர்த்தராகிய இயேசு நமக்காக சிலுவையில் தொங்கினதை தினமும் நினைத்து பாவம் செய்யாதபடி பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும்.

இயேசு கிறிஸ்து காட்டின நல்ல வழியிலே அவருக்கு பிரியமான பிள்ளைகளாக வாழ்வோம். இயேசுவை அறியாத பிறரையும் அவர்களது பாவ வழியில் இருந்து ஜீவனுள்ள நல்ல வழிக்கு அழைத்துவந்து நடக்க செய்வோம்.

கர்த்தராகிய இயேசு இதை தான் விரும்புகிறார். எல்லாம் வல்ல இயேசு காட்டிய நல்ல வழியிலே நடந்து இறுதியில் அவரது நித்தியா பேரின்ப பாக்கியத்தை பெற்றுக்கொள்வோம்.

கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசீர்வதித்து காப்பாராக.

ஆமென். அல்லேலுயா.

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" - நீதிமொழிகள் 28:13
- Hepsibai Ambrose
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக