பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

பட்டாணி சுண்டல்


பட்டாணி சுண்டல்


தேவையானப் பொருள்கள்:
பட்டாணி_1 கப் ( Yellow peas  )
உப்பு_தேவையான அளவு
சின்ன வெங்காயம்_2
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
தாளிக்க:
எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி நீரை வடித்துவிட்டு உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.லேசாக வதக்கினால் போதும்.அடுத்து சுண்டலைக் கொட்டி சூடேறும் வரைக் கிளறிவிட்டு,தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.மாங்காயைக் கூட சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிப் போடலாம். (இதில் தேங்காய்,மாங்காய் இரண்டுமே இல்லாததால் போடவில்லை).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக