பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

இட்லிப் பொடி


இட்லிப் பொடி 


தேவையானப் பொருள்கள்:
கடலைப் பருப்பு_ஒரு கப்
கறுப்பு உளுந்து_ஒரு கப்
காய்ந்த மிளகாய்_8 (காரத்திற்கேற்ப)
மிளகு_1/4 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_ஒரு கொத்து
பூண்டு_2 பற்கள்
உப்பு_தேவைக்கு
செய்முறை:
உப்பு தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் வெறும் வாணலியில் மிதமானத் தீயில் வறுத்து ஆற வைத்து உப்பு சேர்த்து கரகரப்பாக இடித்துக்கொள்ள வேண்டும்.
கடலைப் பருப்பு,உளுந்து இரண்டையும் சிவக்க வறுக்க வேண்டும்.
மிளகாய் நிறம் மாறாமல் வறுக்க வேண்டும்.இதனை பருப்புகள் வறுக்கும்போது போட்டு சூடேறியதும் எடுத்துவிடலாம்.
மிளகு,சீரகம் சூடுவர வறுக்க வேண்டும்.
காய்ந்த கறிவேப்பிலையாக இருந்தால் லேசாக சூடேறினால் போதும். பச்சையாக இருந்தால் சருகு போல் வரும்வரை வறுக்க வேண்டும்.
பூண்டைப் பொடியாக நறுக்கி நன்றாக வதங்கும் வரை வறுக்க வேண்டும்.
கட்டிப் பெருங்காயமாக இருந்தால் பருப்பு வகைகள் வறுக்கும்போது அதிலேயே சேர்த்து வறுத்துக்கொள்ளலாம்.தூள் பெருங்காயமாக இருந்தால் பொடி இடிக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்.
இட்லி,தோசை இவற்றிற்கு வெறும் தூளோ அல்லது தூளுடன் நல்லெண்ணெய் சேர்த்தோ சாப்பிட சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக