பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

கலகலா


கலகலா


தேவையானப் பொருள்கள்:
மைதா_ஒரு கப்
சர்க்கரை_1/2 கப்
நெய்_ஒரு டீஸ்பூன்
உப்பு_துளிக்கும் குறைவாக‌
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
மைதாவில் துளிக்கும் குறைவாக‌ உப்பு சேர்த்து (சுவைக்காக) சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.
இதை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு அதனுடன் நெய் சேர்த்து நன்றாக,உதிர் உதிராக வருமாறு பிசையவும்.நெய் மாவு முழுவதும் பரவியிருக்க வேண்டும்.
இதனுடன்  சர்க்கரையைக் கலந்துகொள்ளவும்.மாவுச்சர்க்கரையாக  இருந்தால் அப்படியே சேர்த்துக்கொள்ளவும்.இல்லை கிரிஸ்டலாக இருந்தால் மிக்ஸியில் போட்டு பொடித்த பிறகு சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்தபிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பூரி மாவை விட நல்ல இறுக்கமாக பிசைந்துகொள்ளவும்.
மாவில் சர்க்கரை கலந்திருப்பதால் தண்ணீர் கொஞ்சம் அதிகமானாலும் மாவு நீர்த்துவிட வாய்ப்புண்டு.எனவே நல்ல கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
இப்போது மாவிலிருந்து சிறு எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல் தேய்த்துவிட்டு ஒரு கத்தியால் சிறுசிறு சதுரங்களாக வருமாறு துண்டுகளாக்கவும்.
அடுத்து ஒரு சதுரத்துண்டைக் கையிலெடுத்து எதிரெதிர் முனைகளை எதிரெதிர் பக்கங்களில் பிடித்து சிறிது முறுக்கிவிட வேண்டும்.
இதுபோலவே எல்லா மாவையும் செய்துகொள்ள வேண்டும்.
பார்ப்பதற்கு அழகான சிறுசிறு சங்குகள் போல் இருக்கும்.
இப்போது எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடுபடுத்தவும்.எண்ணெய் காய்ந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
இப்போது சுவையான,இனிப்பான,மொறுமொறுப்பான‌ கலகலா தயார்.
இதை ஒருவராக செய்தால் எல்லாவற்றையும் செய்து வைத்துக்கொண்டுதான்  பொரித்தெடுக்க வேண்டும்.
இருவர் செய்வதாக இருந்தால் ஒருவர் உருட்டி சங்குகள் செய்தால் மற்றவர் எண்ணெயில் போட்டெடுக்க வசதியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக